The Right Sceptre 55

541

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

Search out, to no one favour show; with heart that justice loves
Consult, then act; this is the rule that right approves.

யாரிடத்திலும்‌ (குற்றம்‌ இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம்‌ செய்யாமல்‌ நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்‌.

To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire toact with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on,constitute rectitude.

பரிமேலழகர் உரை ஓர்ந்து-தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி; யார்மாட்டும் கண்ணோடாது-யாவர் மாட்டும் கண்ணோடாது; இறை புரிந்து -நடுவு நிலைமையைப் பொருந்தி; தேர்ந்து-அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து; செய்வஃதே முறை- அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.
விளக்கம்:
[நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை 'இறை' என்றும், உயிரினும் சிறந்தார்கண்ணும் என்பார், 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும், செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை செங்கோன்மையாவது செவ்விதாகிய முறைசெய்த லுடைமை. குற்றமும் குணமும் தூக்கி ஆராய்தலாற் கோல் என்றார் ; அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று. மேல் அமாத்தியர்மாட்டுஞ் சுற்றத்தார் மாட்டுந் தன்மாட்டுஞ் செய் யுந் திறங் கூறினார் உலகத்தார்மாட்டுஞ் செய்யுந்திறங் கூறுகின்றாராதலான், அதன்பின் இது கூறப்பட்டது (இதன் பொருள்) ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து, நட்டோரென்று கண் ணோடாது, தலைமையைப் பொருந்தி, யாவர்மாட்டும் குற்றத்திற்குத் தக்க தண் டத்தை நூல்முகத்தாலாராய்ந்து, அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும்,
(என்றவாறு). யார்மாட்டும் என்றது தன் சுற்றமாயினு மென்றது.
542

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி

All earth looks up to heav’n whence raindrops fall;
All subjects look to king that ruleth all.

உலகத்தில்‌ உள்ள உயிர்கள்‌ எல்லாம்‌ மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல்‌ குடிகள்‌ எல்லாம்‌ அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்‌.

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.

பரிமேலழகர் உரை உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகாநிற்குமே எனினும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.
விளக்கம்:
[நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி பின்புறாநிற்பர்; அது போல, குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கி பின்புறாநிற்பர், (எ-று).
543

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.

அந்தணர்‌ போற்றும்‌ மறைநூலுக்கும்‌ அறத்திற்கும்‌ அடிப்படையாய்‌ நின்று உலகத்தைக்‌ காப்பது அரசனுடைய செங்கோலாகும்‌.

The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues thereindescribed.

பரிமேலழகர் உரை அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது; மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
விளக்கம்:
[அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி 'அந்தணர் நூல்' என்றார். ''மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்'' (மணி. 22: 208, 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் - அநாதியாயினும், செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை,
(என்றவாறு).
544

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு

Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands.

குடிகளை அன்போடு அணைத்துக்‌ கொண்டு செங்கோல்‌ செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்‌ பொருந்தி உலகம்‌ நிலைபெறும்‌.

The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.

பரிமேலழகர் உரை குடிதழீஇக் கோல் ஒச்சும் மாநில மன்னன் அடி- தன் குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை; தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார்.
விளக்கம்:
[அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும், அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு,
(என்றவாறு). இது முறைமை செய்யும் அரசன்கண்ண தாம் உலகு என்றது.
545

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields.

நீதிமுறைப்படி செங்கோல்‌ செலுத்தும்‌ அரசனுடைய நாட்டில்‌ பருவ மழையும்‌ நிறைந்த விளைவும்‌ ஒரு சேர ஏற்படுவனவாகும்‌.

Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptrewith justice.

பரிமேலழகர் உரை பெயலும் விளையுளும் தொக்கு-பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி; இயல்புளிக் கோல் ஒச்சும் மன்னவன் நாட்ட-நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம்.
விளக்கம்:
['உளி' என்பது மூன்றவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மழை பெய்தாலும் விளைதலுங்கூடி , நூல் சொன்ன இயல்பி னானே முறையை நடத்தவல்ல அரசனது நாட்டகத்தினவாம்,
(என்றவாறு). இது மேற்கூறிய முறைமைசெய்ய மழையும் விளைவும் உண்டாமென்றது.
546

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்

Not lance gives kings the victory,
But sceptre swayed with equity.

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத்‌ தருவது வேல்‌ அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்‌; அச்செங்கோலும்‌ கோணாதிருக்குமாயின்‌.

It is not the javelin that gives victory, but the king’s sceptre, if it do no injustice.

பரிமேலழகர் உரை மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின் கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல்; அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின்,
விளக்கம்:
[கோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார்; ''மாண்ட. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்'' (புறநா 55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின்,
(என்றவாறு). இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.
547

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்

The king all the whole realm of earth protects;
And justice guards the king who right respects.

உலகத்தை எல்லாம்‌ அரசன்‌ காப்பாற்றுவான்‌; நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின்‌ அரசனை அந்த முறையே காப்பாற்றும்‌.

The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

பரிமேலழகர் உரை வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்; அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும்; முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின்.
விளக்கம்:
[முட்டாமல் செலுத்தியவாறு; மகனை முறை செய்தான் கண்ணும் (சிலப். 20;53 - 55), தன்கை குறைத்தான் கண்ணும் (சிலப். 23: 42 - 53) காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும், அவ்வரசனை அவன் றான் செய்யும் முறை காக்கும்; அதனைத் தப்பாமற் செய்யின்,
(என்றவாறு). இது தனக்குக் காவலாம் என்றது.
548

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்

Hard of access, nought searching out, with partial hand
The king who rules, shall sink and perish from the land.

எளிய செல்வி உடையவனாய்‌ ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்‌ தாழ்ந்த நிலையில்‌ நின்று ( பகைவரில்லாமலும்‌) தானே கெடுவான்‌.

The king who gives not facile audience (to those who approach him), and who does not examine andpass judgment (on their complaints), will perish in disgrace.

பரிமேலழகர் உரை எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன்; தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்றுதானே கெடும்.
விளக்கம்:
['எண்பதத்தான்' என்னும் முற்று வினை எச்சமும், 'ஓரா' என்னும் வினை எச்சமும், 'செய்யா' என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன. தாழ்ந்த பதம் : பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக் 85) ஆகலின், பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடு கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அர சன், தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும,
(என்றவாறு). எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங் காலம்.
549

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்

Abroad to guard, at home to punish, brings
No just reproach; ‘tis work assigned to kings.

குடிகளைப்‌ பிறர்‌ வருத்தாமல்‌ காத்துத்‌, தானும்‌ வருத்தாமல்‌ காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத்‌ தக்க தண்டனையால்‌ ஒழித்தல்‌, அரசனுடைய தொழில்‌; பழி அன்று.

In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punishcrime is not a fault in a king, but a duty.

பரிமேலழகர் உரை குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் - குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர் மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல்; வேந்தன் வடு அன்று தொழில் - வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.
விளக்கம்:
[துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் ஈண்டைக்கு எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, ''அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதி தருமம்'' என்றார்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காக, குற்றஞ் செய்தாரை ஒறுத்தல் குற்றமன்று; அரசன் தொழில்,
(என்றவாறு)
550

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain.

கொடியவர்‌ சிலரைக்‌ கொலைத்தண்டனையால்‌ அரசன்‌ ஒறுத்தல்‌ பயிரைக்‌ காப்பாற்றக்‌ களையைக்‌ களைவதற்கு நிகரான செயலாகும்‌.

For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.

பரிமேலழகர் உரை வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்-அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்; பைங்கூழ்களை கட்டதனோடு நேர்-உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.
விளக்கம்:
['கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைபடார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை; இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப. இப்பெற்றியாரைக் கண்ளோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார் மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இ-ள்.) கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்ற மன்று; உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும், (எ-று). கொடியாராவார் கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார்.


transliteration

oarndhthukan notaathu iraipurindhthu yaarmaatdum
thaerndhthusei vakhthae murai

vaanokki vaalum ulakellaam mannavan
koalnokki vaalung kuti

andhthanar nootrkum araththitrkum aathiyaai
ninrathu mannavan koal

kutithaleeik koalochsum maanila mannan
atithaleei nitrkum ulaku

iyalpulik koalochsum mannavan naatda
paeyalum vilaiyulum thokku

vaelanru vaenri tharuvathu mannavan
koalathooung koataa thaenin

iraikaakkum vaiyakam yellaam avanai
muraikaakkum muttaach seyin

yenpathaththaan oaraa muraiseiyaa mannavan
thanpathaththaan thaanae kedum

kutipurang kaaththompik kutrram katithal
vaduvanru vaendhthan tholil

kolaiyitr kotiyaarai vaendhthoruththal paingkool
kalaikat dathanodu naer