குறள் 541

செங்கோன்மை

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

oarndhthukan notaathu iraipurindhthu yaarmaatdum
thaerndhthusei vakhthae murai


Shuddhananda Bharati

Just government

Test and attest impartially
Consult and act the laws justly.


GU Pope

The Right Sceptre

Search out, to no one favour show; with heart that justice loves
Consult, then act; this is the rule that right approves.

To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire toact with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on,constitute rectitude.


Mu. Varadarajan

யாரிடத்திலும்‌ (குற்றம்‌ இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம்‌ செய்யாமல்‌ நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்‌.


Parimelalagar

ஓர்ந்து-தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி; யார்மாட்டும் கண்ணோடாது-யாவர் மாட்டும் கண்ணோடாது; இறை புரிந்து -நடுவு நிலைமையைப் பொருந்தி; தேர்ந்து-அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து; செய்வஃதே முறை- அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.
விளக்கம்:
[நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை 'இறை' என்றும், உயிரினும் சிறந்தார்கண்ணும் என்பார், 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும், செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.]


Manakkudavar

செங்கோன்மையாவது செவ்விதாகிய முறைசெய்த லுடைமை. குற்றமும் குணமும் தூக்கி ஆராய்தலாற் கோல் என்றார் ; அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று. மேல் அமாத்தியர்மாட்டுஞ் சுற்றத்தார் மாட்டுந் தன்மாட்டுஞ் செய் யுந் திறங் கூறினார் உலகத்தார்மாட்டுஞ் செய்யுந்திறங் கூறுகின்றாராதலான், அதன்பின் இது கூறப்பட்டது (இதன் பொருள்) ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து, நட்டோரென்று கண் ணோடாது, தலைமையைப் பொருந்தி, யாவர்மாட்டும் குற்றத்திற்குத் தக்க தண் டத்தை நூல்முகத்தாலாராய்ந்து, அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும்,
(என்றவாறு). யார்மாட்டும் என்றது தன் சுற்றமாயினு மென்றது.