Not Backbiting 19

181

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

Though virtuous words his lips speak not, and all his deeds are ill.
If neighbour he defame not, there’s good within him still.

ஒருவன்‌ அறத்தைப்‌ போற்றிக்‌ கூறாதவனாய்‌ அறமல்லாதவற்றைச்‌ செய்தாலும்‌ மற்றவனைப்‌ பற்றிப்‌ புறங்கூறாமல்‌ இருக்கிறான்‌ என்று சொல்லப்படுதல்‌ நல்லது.

Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him “he does not backbite.”

பரிமேலழகர் உரை ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றால் இனிது-பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று.
விளக்கம்:
(புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனான் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை புறங்கூறாமையாவது யாவரையும் இகழ்ச்சியானவற்றைப் புறத் துரையாமை. (இதன் பொருள்) ஒருவன் அறத்தை வாயாற சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும், பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப் படுதல் நன்றாம்,
(என்றவாறு) இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.
182

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

Than he who virtue scorns, and evil deeds performs, more vile,
Is he that slanders friend, then meets him with false smile.

அறத்தை அழித்துப்‌ பேசி அறமல்லாதவைகளைச்‌ செய்தலைவிட, ஒருவன்‌ இல்லாதவிடத்தில்‌ அவனைப்‌ பழித்துப்‌ பேசி நேரில்‌ பொய்யாக முகமலர்ந்து பேசுதல்‌ தீமையாகும்‌.

To smile deceitfully (in another’s presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.

பரிமேலழகர் உரை அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது-அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப் பொய்த்து நகை-ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல்.
விளக்கம்:
(உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல்-ஒளியைக் கோறல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல்,
(என்றவாறு) இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.
183

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்

‘Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh.

புறங்கூறிப்‌ பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல்‌ வறுமையுற்று இறந்துவிடுதல்‌ அறநூல்கள்‌ சொல்லும்‌ ஆக்கத்தைத்‌ தரும்‌.

Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.

பரிமேலழகர் உரை புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின்-பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்-அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும்.
விளக்கம்:
.(பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய் செய்து உயிரோடு வாழ்தலின், புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லு கின்ற ஆக்க மெல்லாந் தரும்,
(என்றவாறு).
184

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்

In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought.

எதிரே நின்று கணணோட்டம்‌ இல்லாமல்‌ கடுமையாகச்‌ சொன்னாலும்‌ சொல்லலாம்‌; நேரில்‌ இல்லாதபோது பின்‌ விளைவை ஆராயாத சொல்லைச்‌ சொல்லக்கூடாது.

Though you speak without kindness before another’s face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

பரிமேலழகர் உரை கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப்பின் வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.
விளக்கம்:
('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லி னும் அமையும், பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர்முகம் நோக்க வொண் ணாத சொல்லைச் சொல்லா தொழிக,
(என்றவாறு). இது புறங் கூறுதல் தவிர்க வென்றது ; இதனாற கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.
185

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

The slanderous meanness that an absent friend defames,
‘This man in words owns virtue, not in heart,’ proclaims.

அறத்தை நல்லதென்று போற்றும்‌ நெஞ்சம்‌ இல்லாத தன்மை, ஒருவன்‌ மற்றவனைப்பற்றிப்‌ புறங்கூறுகின்ற சிறுமையால்‌ காணப்படும்‌.

The emptiness of that man’s mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.

பரிமேலழகர் உரை புன்மையாற் காணப் படும். br> அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றனல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ்சொல்லுதற்குக் காரணமான மனப்புன்மையானே அறியப்படும்.
விளக்கம்:
(மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும்,
(என்றவாறு). இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது.
186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

Who on his neighbours’ sins delights to dwell,
The story of his sins, culled out with care, the world will tell.

மற்றவனைப்பற்றிப்‌ புறங்கூறுகின்றவன்‌, அவனுடைய பழிகள்‌ பலவற்றிலும்‌ நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப்‌ பிறரால்‌ பழிக்கப்படுவான்‌.

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.

பரிமேலழகர் உரை பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்-தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும்.
விளக்கம்:
('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியாற்கு அவ்வளவன்றி அவன் இறத்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறனுடைய பழியைச் சொல்லுமவன், தனக்குண்டான பழி களிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப்படுவன்,
(என்றவாறு),
187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

With friendly art who know not pleasant words to say,
Speak words that sever hearts, and drive choice friends away.

மகிழும்படியாகப்‌ பேசி நட்புக்கொள்ளுதல்‌ நன்மை என்று தெளியாதவர்‌ தம்மைவிட்டு நீங்கும்படியாகப்‌ புறங்கூறி நண்பரையும்‌ பிரித்துவிடுவர்‌.

Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.

பரிமேலழகர் உரை பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றல் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார்.
விளக்கம்:
(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கரு ததான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். 'கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை" (கலித். மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்; மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வு பண்ண மாட்டாதார்,
(என்றவாறு). இது நட்டவரை யிழப்பர் என்றது.
188

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

Whose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men’s good name?

நெருங்கிப்‌ பழகியவரின்‌ குற்றத்தையும்‌ புறங்கூறித்‌ தூற்றும்‌ இயல்புடையவர்‌, பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?

பரிமேலழகர் உரை துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்-தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல்-அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ?
விளக்கம்:
('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது' என்பது சொல்லெச்சம். 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார், செறிவில்லாதார் மாட்டு யாங்ஙனஞ் செய்வரோ?
(என்றவாறு). இது யாவரோடும் பற்றிலரென்றது.
189

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை

‘Tis charity, I ween, that makes the earth sustain their load.
Who, neighbours’ absence watching, tales or slander tell abroad.

ஒருவர்‌ நேரில்‌ இல்லாதது கண்டு பழிச்சொல்‌ கூறுவோனுடைய உடல்பாரத்தை, “இவனையும்‌ சுமப்பதே எனக்கு அறம்‌’ என்று கருதி நிலம்‌ சுமக்கின்றதோ?

The world through charity supports the weight of those who reproach others observing their absence.

பரிமேலழகர் உரை புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்!
விளக்கம்:
(எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார். இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற் பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்; அல்லது போக் கும்,
(என்றவாறு). இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.
190

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

If each his own, as neighbours’ faults would scan,
Could any evil hap to living man?

அயலாருடைய குற்றத்தைக்‌ காண்பதுபோல்‌ தம்‌ குற்றத்தையும்‌ காணவல்லவரானால்‌, நிலைபெற்ற உயிர்‌ வாழ்க்கைக்குத்‌ துன்பம்‌ உண்டோ?

If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?

பரிமேலழகர் உரை ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்-ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறாகிய தம் குற்றத்தையும் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காணவல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ - அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?
விளக்கம்:
(நடுவு நின்று ஒப்புக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அயலார் குற்றம் போலத் தமது குற்றத்தையுங் காண வல்லா ராயின், நிலை பெற்ற வுயிர்க்கு வருந் தீமை யுண்டோ ?
(என்றவாறு). இது காண்பாராயின், சொல்லாரென்று புறஞ் சொல்லாமைக்குக் காரணங் கூறிற்று.


transliteration

arangkooraan alla seyinum oruvan
purangkooraan yenral inithu

aranaleei allavai seithalin theethae
puranaleeip poiththu nakai

purangkoorip poiththuyir vaalthalin saathal
arangkoorum aakkandh tharum

kanninru kannarach sollinum sollatrka
munninru pinnokkaach sol

aranjsollum naenjchaththaan anmai puranjsollum
punmaiyaatr kaanap padum

piranpali kooruvaan thanpali yullum
thiranthaerindhthu koorap padum

pakachsollik kaelirp pirippar nakachsolli
natpaadal thaetrraa thavar

thunniyaar kutrramum thootrrum marapinaar
yennaikol yaethilaar maatdu

arannokki aatrrungkol vaiyam purannokkip
punsol uraippaan porai

yaethilaar kutrrampol thangkutrrang kaankitrpin
theethuntoh mannum uyirkku