Not Coveting 18

171

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

With soul unjust to covet others’ well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.

நடுவுநிலைமை இல்லாமல்‌ பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன்‌ கவர விரும்பினால்‌ அவனுடைய குடியும்‌ கெட்டு குற்றமும்‌ அப்பொழுதே வந்து சேரும்‌.

If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.

பரிமேலழகர் உரை நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின், குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்-அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச் செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும்.
விளக்கம்:
(குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார், 'நன்பொருள் வெஃகின்' என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.)
மணக்குடவர் உரை வெஃகாமையாவது பிறர் பொருளை விரும்பாமை. (இதன் பொருள்) நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின், அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமு முண்டாம்,
(என்றவாறு). இது சந்தான நாச முண்டாமென்றது.
172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

Through lust of gain, no deeds that retribution bring,
Do they, who shrink with shame from every unjust thing.

நடுவுநிலைமை அல்லாதவற்றைக்‌ கண்டு நாணி ஒதுங்குகின்றவர்‌, பிறர்‌ பொருளைக்‌ கவர்வதால்‌ வரும்‌ பயனை விரும்பிப்‌ பழியான செயல்களைச்‌ செய்யார்‌.

Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.

பரிமேலழகர் உரை படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்-பிறர் பொருளை வெளவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வெளவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர்-நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர்.
விளக்கம்:
('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார்; நடுவன்மைக்கு நாணுபவர்,
(என்றவாறு). இது நடுவு நிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.
173

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

No deeds of ill, misled by base desire,
Do they, whose souls to other joys aspire.

அறநெறியால்‌ பெறும்‌ இன்பத்தை விரும்புகின்றவர்‌, நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம்‌ அல்லாதவற்றைச்‌ செய்யார்‌.

Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)

பரிமேலழகர் உரை சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார்-பிறர்பால் வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர்-அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தைக் காதலிப்பவர்.
விளக்கம்:
('பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய் யார்; பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர்,
(என்றவாறு). இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.
174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்

Men who have conquered sense, with sight from sordid vision freed,
Desire not other’s goods, e’en in the hour of sorest need.

ஐம்புலன்களையும்‌ வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர்‌, “யாம்‌ வறுமை அடைந்தோம்‌’ என்று எண்ணியும்‌ பிறர்‌ பொருளை விரும்பார்‌.

The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought “we are destitute.”

பரிமேலழகர் உரை இலம் என்று வெஃகுதல் செய்யார்-'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார்.
விளக்கம்:
(வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்லவிடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்; ஐம்புலனை யும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார்,
(என்றவாறு). இது தெளிவுடையார் செய்யா ரென்றது.
175

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?

யாரிடத்திலும்‌ பொருளைக்‌ கவர விரும்பிப்‌ பொருந்தாதவற்றைச்‌ செய்தால்‌, நுட்பமானதாய்‌ விரிவுடையதாய்‌ வளர்ந்த அறிவால்‌ பயன்‌ என்ன?

What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?

பரிமேலழகர் உரை அஃகி அகன்ற அறிவு என்னாம்-நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகி யார் மாட்டும் வெறிய செயின்-பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின்.
விளக்கம்:
('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது, தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவம், கடியனவும் முதலியன் செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார்மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வானாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.
176

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

Though, grace desiring, he in virtue’s way stand strong,
He’s lost who wealth desires, and ponders deeds of wrong.

அருளை விரும்பி அறநெறியில்‌ நின்றவன்‌, பிறனுடைய பொருளை விரும்பிப்‌ பொல்லாத குற்றங்களை எண்ணினால்‌ கெடுவான்‌.

If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.

பரிமேலழகர் உரை அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்-பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும்.
விளக்கம்:
(இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும், பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன்,
(என்றவாறு). இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.
177

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

Seek not increase by greed of gain acquired;
That fruit matured yields never good desired.

பிறர்‌ பொருளைக்‌ கவர விரும்புவதால்‌ ஆகும்‌ ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்‌; அது பயன்‌ விளைக்கும்போது அப்பயன்‌ நன்மையாவது அரிதாகும்‌.

Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.

பரிமேலழகர் உரை வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க-பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டற்கு அரிது ஆம்-பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான்.
விளக்கம்:
('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டா தொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாத லில்லையாதலான்.
178

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

What saves prosperity from swift decline?
Absence of lust to make another’s cherished riches thine!

ஒருவனுடைய செல்வத்திற்குக்‌ குறைவு நேராதிருக்க வழி எது என்றால்‌, அவன்‌ பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்‌.

If it is weighed, “what is the indestructibility of wealth,” it is freedom from covetousness.

பரிமேலழகர் உரை செல்வத்திற்கு அஃகாமை யாதெனின்-சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறர் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை-அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம்
விளக்கம்:
('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை,
(என்றவாறு). இது செல்வ மழியாதென்றது.
179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு

Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.

அறம்‌ இஃது என்று அறிந்து பிறர்‌ பொருளை விரும்பாத அறிவுடையாரைத்‌ திருமகள்‌ தான்‌ சேரும்‌ திறன்‌ அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்‌.

Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.

பரிமேலழகர் உரை அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும்-திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும்.
விளக்கம்:
(அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும்,
(என்றவாறு). அறனறிதல் - விரும்பாமை யென்றறிதல். இது செல்வ முண்டாமென்றது.
180

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு

From thoughtless lust of other’s goods springs fatal ill,
Greatness of soul that covets not shall triumph still.

விளைவை எண்ணாமல்‌ பிறர்‌ பொருளை விரும்பினால்‌ அஃது அழிவைத்‌ தரும்‌; அப்பொருளை விரும்பாமல்‌ வாழும்‌ பெருமை வெற்றியைத்‌ தரும்‌.

To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.

பரிமேலழகர் உரை எண்ணாது வெஃகின் இறல் ஈனும்-பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வெளவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும்-அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்.
விளக்கம்:
(பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல் ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டிய உழல்வோர் யாவரையும் கீழ்ப்படுத்தலின், 'விறல் ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகுபெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின், அது கேட் டைத் தரும்; அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத் தரும், (எ-று) இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.


transliteration

naduvinri nanporul vaekhkin kutiponrik
kutrramum aangkae tharum

padupayan vaekhkip palippaduva seiyaar
naduvanmai naanu pavar

sitrrinpam vaekhki aranalla seiyaarae
matrrinpam vaendu pavar

ilamaenru vaekhkuthal seiyaar pulamvaenra
punmaiyil kaachi yavar

akhki akanra arivaennaam yaarmaatdum
vaekhki vaeriya seyin

arulvaekhki aatrrinkan ninraan porulvaekhkip
pollaatha koolak kedum

vaendatrka vaekhkiyaam aakkam vilaivayin
maandatr karithaam payan

akhkaamai selvaththitrku yaathaenin vaekhkaamai
vaendum pirankaip porul

aranarindhthu vaekhkaa arivutaiyaarch saerum
thiranarindh thaangkae thiru

iraleenum yennaathu vaekhkin viraleenum
vaentaamai yennunj serukku