Not Envying 17

161

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

As ‘strict decorum’s’ laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.

ஒருவன்‌ தன்‌ நெஞ்சில்‌ பொறாமை இல்லாமல்‌ வாழும்‌ இயல்பைத்‌ தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக்‌ கொண்டு போற்ற வேண்டும்‌.

Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.

பரிமேலழகர் உரை ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக கொள்க-தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க.
விளக்கம்:
(இயல்பு-அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.)
மணக்குடவர் உரை அழுக்காறாமையாவது பிறராக்க முதலாயின் கண்டு பொறாமையால் வரும் கின்ற மனக்கோட்டத்தைச் செய்யாமை. (இதன் பொருள்) ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாதவியல்பைத், தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க,
(என்றவாறு). இஃது அழுக்காறு தவிர வேண்டு மென்றது.
162

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

If man can learn to envy none on earth,
‘Tis richest gift, -beyond compare its worth.

யாரிடத்திலும்‌ பொறாமை இல்லாதிருக்கப்‌ பெற்றால்‌, ஒருவன்‌ பெறத்தக்க மேம்பாடான பேறுகளில்‌ அதற்கு ஒப்பானது வேறொன்றும்‌ இல்லை.

Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.

பரிமேலழகர் உரை யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்-யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை-மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை.
விளக்கம்:
(அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) விழுமிய பேறுகளுள், யார்மாட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை,
(என்றவாறு). இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.
163

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்

Nor wealth nor virtue does that man desire ‘tis plain,
Whom others’ wealth delights not, feeling envious pain.

தனக்கு அறமும்‌ ஆக்கமும்‌ விரும்பாதவன்‌ என்று கருதத்தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக்‌ கண்டு மகிழாமல்‌ பொறாமைப்படுவான்‌.

Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said “he neither desires virtue not wealth.”

பரிமேலழகர் உரை அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்-மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான்-பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான்.
விளக்கம்:
('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படு வான்; பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான்,
(என்றவாறு) இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.
164

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து

The wise through envy break not virtue’s laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில்‌ துன்பம்‌ ஏற்படுதலை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச்‌ செய்யார்‌ அறிவடையோர்‌.

(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.

பரிமேலழகர் உரை அழுக்காற்றின் அல்லவை செய்யார்-அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து.
விளக்கம்:
(அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை ; அச் செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை,
(என்றவாறு)
165

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது

Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate.

பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும்‌, பகைவர்‌ தீங்குசெய்யத்‌ தவறினாலும்‌ தவறாமல்‌ கேட்டைத்‌ தருவது அது.

To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.

பரிமேலழகர் உரை ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது-அழுக்காறு பகைவரை யொழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின், அழுக்காறு உடையார்க்கு அது சாலும்-அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும்.
விளக்கம்:
('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்; பகை வர் கேடுபயத்தால் தப்பியும் கெடுப்பதற்கு,
(என்றவாறு). இஃது உயிர்க்குக் கேடுவரு மென்று கூறிற்று.
166

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்

Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die.

பிறர்க்கு உதவியாகக்‌ கொடுக்கப்படும்‌ பொருளைக்‌ கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம்‌, உடையும்‌ உணவும்‌ இல்லாமல்‌ கெடும்‌.

He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.

பரிமேலழகர் உரை கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்-ஒருவன் பிறர்க்கு கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்-உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்.
விளக்கம்:
(கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல், 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற் றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும், (எ-று.) இது நல்குரவு தருமென்றது.
167

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

From envious man good fortune’s goddess turns away,
Grudging him good, and points him out misfortune’s prey.

பொறாமை உடையவனைத்‌ திருமகள்‌ கண்டு பொறாமைப்பட்டுத்‌ தன்‌ தமக்கைக்கு அவனைக்‌ காட்டி நீங்கி விடுவாள்‌.

Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.

பரிமேலழகர் உரை அழுக்காறு உடையானை-பிறர் ஆக்கம் கண்வழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும்-திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்கு காட்டி நீங்கும்.
விளக்கம்:
(தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது' அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி. மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கோடுவித்து அழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அழுக்காறுடையானைத் திரு மகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி, இவன்பாற் செல்லென்று போம், (எ-று) இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.
168

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.

பொறாமை என்று கூறப்படும்‌ ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தையும்‌ கெடுத்துத்‌ தீய வழியில்‌ அவனைச்‌ செலுத்திவிடும்‌.

Envy will destroy (a man’s) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)

பரிமேலழகர் உரை அழுக்காறு என ஒரு பாவி-அழுக்காறு என்று சொல்லபட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்-தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து, மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.
விளக்கம்:
(பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங் கெடுத்தாற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தை யுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்திவிடும்,
(என்றவாறு). ஒரு பாவி - நிகரில்லாத பாவி. இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.
169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

To men of envious heart, when comes increase of joy,
Or loss to blameless men, the ‘why’ will thoughtful hearts employ.

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும்‌, பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும்‌ ஆராயத்‌ தக்கவை.

The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.

பரிமேலழகர் உரை அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-கோட்டத்தினைப் பொருந்திய தனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்-ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்.
விளக்கம்:
(கோட்டாம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின், என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின், 'நினைக்கப்படும்' என்றார். ''இம்மைச் செய்தன யான்அறி நல்வினை; உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது' (சிலப்.15:91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத் தானுடைய கேடும் விசாரிக்கப்படும்,
(என்றவாறு)
170

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.

பொறாமைப்பட்டுப்‌ பெருமையுற்றவரும்‌ உலகத்தில்‌ இல்லை; பொறாமை இல்லாதவராய்‌ மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும்‌ இல்லை.

Never have the envious become great; never have those who are free from envy been without greatness.

பரிமேலழகர் உரை அழுக்கற்று அகன்றாரும் இல்லை-அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை.
விளக்கம்:
(இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை ; அச் செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை,
(என்றவாறு)


transliteration

olukkaaraak kolka oruvanthan naenjchaththu
alukkaaru ilaatha iyalpu

viluppaetrrin akhthoppathu illaiyaar maatdum
alukkaatrrin anmai paerin

aranaakkam vaentaathaan yenpaan piranaakkam
paenaathu alukkarup paan

alukkaatrrin allavai seiyaar ilukkaatrrin
yaetham padupaakku arindhthu

alukkaaru utaiyaarkku athusaalum onnaar
valukkiyum kaeteen pathu

koduppathu alukkaruppaan sutrram uduppathooum
unpathooum inrik kedum

avviththu alukkaaru utaiyaanaich seiyaval
thavvaiyaik kaatti vidum

alukkaaru yenaoru paavi thiruchsetrruth
theeyuli uiththu vidum

avviya naenjchaththaan aakkamum sevviyaan
kaedum ninaikkap padum

alukkatrru akanraarum illai akhthuillaar
paerukkaththil theerndhthaarum il