The Possession of Patience, Forbearance 16

151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.

தன்னை வெட்டுவோரையும்‌ விழாமல்‌ தாங்குகின்ற நிலம்போல்‌, தம்மை இகழ்வாரையும்‌ பொறுப்பதே தலையான பண்பாகும்‌.

To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.

பரிமேலழகர் உரை அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம்போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம்.
விளக்கம்:
(இகழ்தல்: மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)
மணக்குடவர் உரை பொறையுடைமையாவது தமக்குத் துன்பஞ் செய்தாரைத் தாமுந் துன்பஞ் செய்யாது அவர் மாட்டுச் சென்ற வெகுளியை மீட்டல். (இதன் பொருள்) தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழு மவர்களைப் பொறுத்தல் தலைமையாம்,
(என்றவாறு). இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.
152

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று

Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise;

வரம்பு கடந்து பிறர்‌ செய்த தீங்கை எப்போதும்‌ பொறுக்க வேண்டும்‌. அத்தீங்கை நினைவிலும்‌ கொள்ளாமல்‌ மறந்துவிடுதல்‌ பொறுத்தலைவிட நல்லது.

Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

பரிமேலழகர் உரை என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின் அப்பொறையினும் நன்று.
விளக்கம்:
('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும். பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறுத்தலை 'அதனினும் நன்று' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப் பொறையினும் நன்று,
(என்றவாறு)
153

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.

வறுமையுள்‌ வறுமை, விருந்தினரைப்‌ போற்றாமல்‌ நீக்குதல்‌; வல்லமையுள்‌ வல்லமை என்பது அறிவிலார்‌ தீங்கு செய்தலைப்‌ பொறுத்தலாகும்‌.

To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.

பரிமேலழகர் உரை இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல் வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல்.
விளக்கம்:
(இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வலியின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக் காமை; வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல்,
(என்றவாறு). புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை - பொறுமை.
154

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்

Seek’st thou honour never tarnished to retain;
So must thou patience, guarding evermore, maintain.

நிறை உடையவனாக இருக்கும்‌ தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டினால்‌, பொறுமையைப்‌ போற்றி ஒழுக வேண்டும்‌.

If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.

பரிமேலழகர் உரை நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுகப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும்.
விளக்கம்:
(பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின், பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும்,
(என்றவாறு). நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.
155

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.

(தீங்கு செய்தவரைப்‌) பொறுக்காமல்‌ வருத்தினவரை உலகத்தார்‌ ஒரு பொருளாக மதியார்‌; ஆனால்‌ பொறுத்தவரைப்‌ பொன்போல்‌ மனத்துள்‌ வைத்து மதிப்பர்‌.

(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.

பரிமேலழகர் உரை ஒறுத்தாரை, ஒன்றாக வையார்-பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர்-அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர்.
விளக்கம்:
(ஒறுத்தவர் தாமும் அத்தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாக வையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல். --
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார்; பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்து தாற்போலப் போற்றுவார் உலகத்தார், (எ - று )
156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.

தீங்கு செய்தவரைப்‌ பொறுக்காமல்‌ வருத்தினவர்க்கு ஒருநாள்‌ இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம்‌ அழியும்‌ வரைக்கும்‌ புகழ்‌ உண்டு.

The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.

பரிமேலழகர் உரை ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்-தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்னும் துணையும் புகழ்-அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
விளக்கம்:
(ஒருநாளை இன்பம், அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின், ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒறுத்தவர்க்கு அற்றை நாளை யின்பமே உண்டாம்: பொறுத்த வர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம்,
(என்றவாறு). இது புகழுண்டா மென்றது.
157

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று

Though others work thee ill, thus shalt thou blessing reap;
Grieve for their sin, thyself from vicious action keep!

தகுதி அல்லாதவைகளைத்‌ தனக்குப்‌ பிறர்‌ செய்த போதிலும்‌, அதனால்‌ அவர்க்கு வரும்‌ துன்பத்திற்காக நொந்து அறம்‌ அல்லாதவற்றைச்‌ செய்யாதிருத்தல்‌ நல்லது.

Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.

பரிமேலழகர் உரை திறன் அல்ல தன் பிறர் செய்யினும்-செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று-அவர்க்கு அதனால் வரும் துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று.
விளக்கம்:
(உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை-எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி.58) என்று பரிதல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும், அவற் றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற் றைச் செய்யாமை நன்று, (எ-று).
158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்

With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.

செருக்கினால்‌ தீங்கானவற்றைச்‌ செய்தவரைத்‌ தாம்‌ தம்முடைய பொறுமைப்‌ பண்பினால்‌ பொறுத்து வென்றுவிட வேண்டும்‌.

Let a man by patience overcome those who through pride commit excesses.

பரிமேலழகர் உரை மிகுதியான் மிக்கவை செய்தாரை-மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் பொறையான் வென்று விடுக.
விளக்கம்:
(தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக,
(என்றவாறு). இது பொறுத்தானென்பது தோல்வியாகாது ; அது தானே வெற்றியா மென்றது.
159

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

They who transgressors’ evil words endure
With patience, are as stern ascetics pure.

வரம்பு கடந்து நடப்பவரின்‌ வாயில்‌ பிறக்கும்‌ கொடுஞ்‌ சொற்களைப்‌ பொறுத்துக்‌ கொள்பவர்‌ துறந்தவரைப்‌ போலத்‌ தூய்மையானவர்‌ ஆவர்‌.

Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.

பரிமேலழகர் உரை துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்சிற்பவர்-நெறியைக் கடந்தார வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்.
விளக்கம்:
(தூய்மை: மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டிய தன் இழிபு முடித்தற்கு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர் , துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார்,
(என்றவாறு). இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.
160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

Though ‘great’ we deem the men that fast and suffer pain,
Who others’ bitter words endure, the foremost place obtain.

உணவு உண்ணாமல்‌ நோன்பு கிடப்பவர்‌, பிறர்‌ சொல்லும்‌ கொடுஞ்‌ சொற்களைப்‌ பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான்‌ பெரியவர்‌ ஆவர்‌.

Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.

பரிமேலழகர் உரை உண்ணாது நோற்பார் பெரியர்-விரதங்களான் ஊனைத் தவிர்த்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின்-அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின்.
விளக்கம்:
(பிறர்-அறிவிலாதார். நோலாமைக்கு ஏதுஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; அவர் பெரியா ராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின்,
(என்றவாறு). இது தவம் பண்ணுவாரினும் பெரியரென்றது.


transliteration

akalvaaraith thaangkum nilampolath thammai
ikalvaarp poruththal thalai

poruththal irappinai yenrum athanai
maraththal athaninum nanru

inmaiyul inmai virundhthoraal vanmaiyul
vanmai madavaarp porai

niraiyutaimai neengkaamai vaentin poraiyutaimai
potrri yolukap padum

oruththaarai onraaka vaiyaarae vaippar
poruththaaraip ponpotr pothindhthu

oruththaarkku orunaalai inpam poruththaarkkup
ponrundh thunaiyum pukal

thiranalla thatrpirar seiyinum nonondhthu
aranalla seiyaamai nanru

mikuthiyaan mikkavai seithaaraith thaandhtham
thakuthiyaan vaenru vidal

thurandhthaarin thooimai utaiyar irandhthaarvaai
innaachsol notrkitr pavar

unnaathu notrpaar paeriyar pirarsollum
innaachsol notrpaarin pin