குறள் 169

அழுக்காறாமை

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

avviya naenjchaththaan aakkamum sevviyaan
kaedum ninaikkap padum


Shuddhananda Bharati

Avoid envy

Why is envy rich, goodmen poor
People with surprise think over.


GU Pope

Not Envying

To men of envious heart, when comes increase of joy,
Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ.

The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.


Mu. Varadarajan

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும்‌, பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும்‌ ஆராயத்‌ தக்கவை.


Parimelalagar

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-கோட்டத்தினைப் பொருந்திய தனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்-ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்.
விளக்கம்:
(கோட்டாம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின், என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின், 'நினைக்கப்படும்' என்றார். ''இம்மைச் செய்தன யான்அறி நல்வினை; உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது' (சிலப்.15:91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத் தானுடைய கேடும் விசாரிக்கப்படும்,
(என்றவாறு)