குறள் 167

அழுக்காறாமை

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

avviththu alukkaaru utaiyaanaich seiyaval
thavvaiyaik kaatti vidum


Shuddhananda Bharati

Avoid envy

Fortune deserts the envious
Leaving misfortune omnious.


GU Pope

Not Envying

From envious man good fortune's goddess turns away,
Grudging him good, and points him out misfortune's prey.

Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.


Mu. Varadarajan

பொறாமை உடையவனைத்‌ திருமகள்‌ கண்டு பொறாமைப்பட்டுத்‌ தன்‌ தமக்கைக்கு அவனைக்‌ காட்டி நீங்கி விடுவாள்‌.


Parimelalagar

அழுக்காறு உடையானை-பிறர் ஆக்கம் கண்வழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும்-திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்கு காட்டி நீங்கும்.
விளக்கம்:
(தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது' அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி. மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கோடுவித்து அழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) அழுக்காறுடையானைத் திரு மகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி, இவன்பாற் செல்லென்று போம், (எ-று) இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.