குறள் 171

வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

naduvinri nanporul vaekhkin kutiponrik
kutrramum aangkae tharum


Shuddhananda Bharati

Against covetousness

Who covets others' honest wealth
That greed ruins his house forthwith.


GU Pope

Not Coveting

With soul unjust to covet others' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.

If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.


Mu. Varadarajan

நடுவுநிலைமை இல்லாமல்‌ பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன்‌ கவர விரும்பினால்‌ அவனுடைய குடியும்‌ கெட்டு குற்றமும்‌ அப்பொழுதே வந்து சேரும்‌.


Parimelalagar

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின், குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்-அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச் செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும்.
விளக்கம்:
(குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார், 'நன்பொருள் வெஃகின்' என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.)


Manakkudavar

வெஃகாமையாவது பிறர் பொருளை விரும்பாமை. (இதன் பொருள்) நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின், அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமு முண்டாம்,
(என்றவாறு). இது சந்தான நாச முண்டாமென்றது.