The Not Speaking Profitless Words 20

191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.

கேட்டவர்‌ பலரும்‌ வெறுக்கும்படியாகப்‌ பயனில்லாத சொற்களைச்‌ சொல்லுகின்றவன்‌, எல்லோராலும்‌ இகழப்படுவான்‌.

He who to the disgust of many speaks useless things will be despised by all.

பரிமேலழகர் உரை பல்லார் முனிப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன்இலவாகிய சொற்களைச் சொல்லுவான்; எல்லாரும் எள்ளப்படும் - எல்லாரானும் இகழப்படும்.
விளக்கம்:
(அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், 'எல்லாரும் எள்ளப்படும்' என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.
மணக்குடவர் உரை பயனில சொல்லாமையாவது கேட்டார்க்குந் தனக்கும் நற்பயன் படாத சொற்களைக் கூறாமை. (இதன் பொருள்) பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுமவன், எல்லா ரானும் இகழப்படுவன்,
(என்றவாறு)
192

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது

Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.

பலர்‌ முன்னே பயனில்லாத சொற்களைச்‌ சொல்லுதல்‌, நண்பரிடத்தில்‌ அறம்‌ இல்லாத செயல்களைச்‌ செய்தலை விடத்‌ தீமையானதாகும்‌.

To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.

பரிமேலழகர் உரை பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல்; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது.
விளக்கம்:
((விருப்பம்இல. வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாத வற்றை நட்டார்மாட்டுச் செய்தலினுந் தீதே, (எ - று ) இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.
193

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.

ஒருவன்‌ பயனில்லாத பொருள்களைப்‌ பற்றி விரிவாகச்‌ சொல்லும்‌ சொற்கள்‌, அவன்‌ அறம்‌ இல்லாதவன்‌ என்பதை அறிவிக்கும்‌.

That conversation in which a man utters forth useless things will say of him “he is without virtue.”

பரிமேலழகர் உரை பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே; நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன்' என்பதனை உரைக்கும்.
விளக்கம்:
(உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நயனுடைய னல்ல னென்பதனை யறிவிக்கும்; பயனில்லாதவற் றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள்,
(என்றவாறு). இது பயனில் சொல்வார் இம்மையின் கண் பிறராலியம்பப்படாரென்றது.
194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

Unmeaning, worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good.

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப்‌ பலரிடத்தும்‌ சொல்லுதல்‌, அறத்தோடு பொருந்தாமல்‌ நன்மையிலிருந்து நீங்கச்‌ செய்யும்‌.

The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.

பரிமேலழகர் உரை பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின்; நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்.
விளக்கம்:
(பண்பு: இனிமையும் மெய்யும் முதலாய சொற்குணங்கள். 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பல ரிடத்துக் கூறுவானாயின், அவன் நடு சாராது நன்மையி னீங்கும்,
(என்றவாறு). இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.
195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர்‌ சொல்லுவாரானால்‌, அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்‌.

If the good speak vain words their eminence and excellence will leave them.

பரிமேலழகர் உரை பயன் இல நீர்மையுடையார் சொலின்-பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும்.
விளக்கம்:
(நீர்மை: நீரின் தன்மை. 'சொல்லின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின், அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம்,
(என்றவாறு). இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.
196

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்

Who makes display of idle words’ inanity,
Call him not man, -chaff of humanity!

பயனில்லாத சொற்களைப்‌ பலமுறையும்‌ சொல்லுகின்ற ஒருவனை மனிதன்‌ என்று சொல்லக்கூடாது; மக்களுள்‌ பதர்‌ என்றே சொல்ல வேண்டும்‌.

Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.

பரிமேலழகர் உரை பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்-பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க; மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக.
விளக்கம்:
('அல்' விகுதி வியங்கோள்; முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னா தொழிக; மக்களில் பதரென்று சொல்லுக,
(என்றவாறு) இது மக்கட் பண்பிலனென்றது.
197

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

Let those who list speak things that no delight afford,
‘Tis good for men of worth to speak no idle word.

அறம்‌ இல்லாதவற்றைச்‌ சொன்னாலும்‌ சொல்லலாம்‌; சான்றோர்‌ பயனில்லாத சொற்களைச்‌ சொல்லாமல்‌ இருத்தல்‌ நன்மையாகும்‌.

Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.

பரிமேலழகர் உரை நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக-சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும்; பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று.
விளக்கம்:
('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று,
(என்றவாறு). இது சான்றோர்க்கு ஆகாதென்றது.
198

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்

The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர்‌, மிக்க பயன்‌ இல்லாத சொற்களை ஒருபோதும்‌ சொல்லமாட்டார்‌.

The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

பரிமேலழகர் உரை அரும்பயன் ஆயும் அறிவினார்-அறிதற்கு அரிய பயன்களை ஆராய வல்ல அறிவினையுடையார்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்.
விளக்கம்:
(அறிதற்கு அரிய பயன்களாவன: வீடு பேறும் மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிதும் உடையனவும் ஒழிக்கப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார் ; பெரிய பயனில்லாத சொற்களை,
(என்றவாறு). இது மேற் கூறிய குற்றமெல்லாம் பயத்தலின், இதனை யறிவுடையார் கூறா ரென்றது.
199

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

The men of vision pure, from wildering folly free,
Not e’en in thoughtless hour, speak words of vanity.

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர்‌, பயன்‌ நீங்கிய சொற்களை ஒருகால்‌ மறந்தும்‌ சொல்லமாட்டார்‌.

Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.

பரிமேலழகர் உரை பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார்; மருள் தீர்ந்த மாசுஅறு காட்சியவர்-மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார்.
விளக்கம்:
('தூய அறிவு' மெய்யறிவு, 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் 'காட்சியவர்' என்னும் குறிப்புப் பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல் சொல்லாமையின் குணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார்,
(என்றவாறு). இது தெளிவுடையார் கூறாரென்றது.
200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

If speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word.

சொற்களில்‌ பயன்‌ உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும்‌; பயன்‌ இல்லாதவைகளாகிய சொற்களைச்‌ சொல்லவேகூடாது.

Speak what is useful, and speak not useless words.

பரிமேலழகர் உரை சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக; சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக.
விளக்கம்:
('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வரு நிலை என்னும் அணி நோக்கி வந்தது, ''வைகலும் வைகல் வரக்கண்டும்'' (நாலடி. 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக; சொற் களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக,
(என்றவாறு). இது பயனில் சொல்லாமை வேண்டுமென்றது.


transliteration

pallaar muniyap payanila solluvaan
yellaarum yellap padum

payanila pallaarmun sollal nayanila
nattaarkan seithalitr reethu

nayanilan yenpathu sollum payanila
paarith thuraikkum urai

nayansaaraa nanmaiyin neekkum payansaaraap
panpilsol pallaa rakaththu

seermai sirappodu neengkum payanila
neermai yutaiyaar solin

payanilsol paaraatdu vaanai makanyenal
makkat pathati yaenal

nayanila sollinunj solluka saannor
payanila sollaamai nanru

arumpayan aayum arivinaar sollaar
paerumpayan illaatha sol

porultheerndhtha pochsaandhthunj sollaar marultheerndhtha
maacharu kaachi yavar

solluka sollitr payanutaiya sollatrka
sollitr payanilaach sol