குறள் 189

புறங்கூறாமை

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை

arannokki aatrrungkol vaiyam purannokkip
punsol uraippaan porai


Shuddhananda Bharati

Against slander

The world in mercy bears his load
Who rants behind words untoward


GU Pope

Not Backbiting

'Tis charity, I ween, that makes the earth sustain their load.
Who, neighbours' absence watching, tales or slander tell abroad.

The world through charity supports the weight of those who reproach others observing their absence.


Mu. Varadarajan

ஒருவர்‌ நேரில்‌ இல்லாதது கண்டு பழிச்சொல்‌ கூறுவோனுடைய உடல்பாரத்தை, “இவனையும்‌ சுமப்பதே எனக்கு அறம்‌' என்று கருதி நிலம்‌ சுமக்கின்றதோ?


Parimelalagar

புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்!
விளக்கம்:
(எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார். இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற் பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்; அல்லது போக் கும்,
(என்றவாறு). இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.