குறள் 186

புறங்கூறாமை

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

piranpali kooruvaan thanpali yullum
thiranthaerindhthu koorap padum


Shuddhananda Bharati

Against slander

His failings will be found and shown,
Who makes another's failings known.


GU Pope

Not Backbiting

Who on his neighbours' sins delights to dwell,
The story of his sins, culled out with care, the world will tell.

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.


Mu. Varadarajan

மற்றவனைப்பற்றிப்‌ புறங்கூறுகின்றவன்‌, அவனுடைய பழிகள்‌ பலவற்றிலும்‌ நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப்‌ பிறரால்‌ பழிக்கப்படுவான்‌.


Parimelalagar

பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்-தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும்.
விளக்கம்:
('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியாற்கு அவ்வளவன்றி அவன் இறத்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறனுடைய பழியைச் சொல்லுமவன், தனக்குண்டான பழி களிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப்படுவன்,
(என்றவாறு),