Feigned Anger 132

1311

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

From thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace!

பரத்தமை உடையாய்‌! பெண்தன்மை உடையவர்‌ எல்லாரும்‌ தம்தம்‌ கண்களால்‌ பொதுப்‌ பொருளாகக்‌ கொண்டு நுகர்கின்றார்கள்‌; ஆகையால்‌ உன்‌ மார்பைப்‌ பொருந்தேன்‌.

You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.

பரிமேலழகர் உரை உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது. பரத்த- பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்-நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன்.
விளக்கம்:
(கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணக்கமாயிற்று.)
மணக்குடவர் உரை மேற்கு புலவி நுணுக்கமாவது தலைமகத்தென்டுத் தவறிலவாயினும், தன் காதல் மிகுதியால் சொல்லெச்சத்தினானும் கு, க, பச்சத்தினானும் வேறுபடப் பொருள் கொண்டு, தலைமகள் புலந்து கூறுதல். இது செவ்வியிற்றோன்று மாதலின் நுணுக்கமாயிற்று. (இதன் பொருள்) பரத்தமையை யுடையாய்! நின் மார்பைப் பெண்மை யுடையா ரெல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர்; அத னால், யான் அதனைத் தீண்டேன்,
(என்றவாறு). இது தலைமகள் புல்விகண்டு என் மாட்டுக் குற்றமியாதோவென்று கூறிய தலைமகற்கு அவள் கூறியது.
1312

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து

One day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, ‘Long life to you!’

காதலரோடு ஊடல்‌ கொண்டிருந்தோமாக, யாம்‌ தம்மை நெடுங்காலம்‌ வாழ்க என்று வாய்திறந்து சொல்லுவோம்‌ என நினைத்து அவர்‌ தும்மினார்‌.

When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.

பரிமேலழகர் உரை தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்த காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி;
விளக்கம்:
(தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்மோடு புலந்து உரையாடாது இருந்தோமாக; அவ்விடத்து யாம் தம்மை நெடிது வாழுவீரென்று சொல்லுவோமென்பதனை யறிந்துத் தும்மினார். இது தலைமகள் தோழிக்குக் கூறியது.
1313

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று

I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
She cries, ‘Pray, for what woman now Do you put on your flowers?’

கிளைகளில்‌ மலர்ந்த மலர்களைச்‌ சூடினாலும்‌ ‘நீர்‌ இந்த அழகை யாரோ ஒருத்திக்குக்‌ காட்டுவதற்காகச்‌ சூடினீர்‌’ என்று சினம்‌ கொள்வாள்‌.

Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.

பரிமேலழகர் உரை தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, 'நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது?' என்ற தோழிக்கு தலைமகன் சொல்லியது. கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச் செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியை காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப் பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ?
விளக்கம்:
('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர்; வளையமாகச் சூடினும் என்பதாம்; ''கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்'' (புறநா. 275) என்றார் பிறரும். இனி, 'அம் மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், 'பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்,' எனினும் அமையும்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடினீரே ன்று சொல்லிக் காயும், (எ - று ) பக்கப்பூ - ஒப்பனைப்பூ. கோட்டுப்பூச் சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீ ரெனினுமாம். இது கோலஞ் செய்யினும் குற்றமென்று கூறியது.
1314

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

‘I love you more than all beside,’ ‘T was thus I gently spoke;
“What all, what all?’ she instant cried; And all her anger woke.

‘யாரையும்விட நாம்‌ மிக்க காதல்‌ கொண்டிருக்கிறோம்‌. என்று சொன்னேனாக, யாரைவிட? யாரைவிட? என்று கேட்டு ஊடல்‌ கொண்டாள்‌.

When I said I loved her more than any other woman, she said “more than others, yes, more than others,” and remained sulky.

பரிமேலழகர் உரை இதுவும் அது. யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, 'அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர்' என்று சொல்லிப் புலந்தாள்.
விளக்கம்:
(தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்பை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார்யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள், (க- று)
1315

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

“While here I live, I leave you not,’ I said to calm her fears.
She cried, ‘There, then, I read your thought’; And straight dissolved in tears.

“இப்பிறப்பில்‌ யாம்‌ பிரியமாட்டோம்‌’ என்று காதலியிடம்‌ சொன்னேனாக, இனி வரும்‌ பிறப்பில்‌ பிரிவதாக உணர்ந்து கண்‌ நிறையக்‌ கண்ணீர்‌ கொண்டாள்‌.

When I said I would never part from her in this life her eyes were filled with tears.

பரிமேலழகர் உரை இதுவும் அது. இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேன் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள். அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள்.
விளக்கம்:
('வௌ¢ப்படு சொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக; அதனால், மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள். 2
1316

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்

“Each day I called to mind your charms,’ ‘O, then, you had forgot,’
She cried, and then her opened arms, Forthwith embraced me not.

“நினைத்தேன்‌ என்று கூறினேன்‌; “நினைப்புக்கு முன்‌ மறப்பு உண்டு அன்றோ? ஏன்‌ மறந்தீர்‌? என்று என்னைத்‌ தழுவாமல்‌ ஊடினாள்‌.

When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began tofeign dislike.

பரிமேலழகர் உரை இதுவும் அது. தும்மினேனாக வழுத்தினாள் - கூறியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, 'நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்?' என்று சொல்லிப் புலந்தழுதாள்.
விளக்கம்:
(வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான் அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இவ்வழக்கை உள் வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்; மறந்தாரன்றே நினைப்பார்; ஆதலான், எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங் காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள்,
(என்றவாறு). இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.
1317

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று

She hailed me when I sneezed one day; But straight with anger seized,
She cried; “Who was the woman, pray, Thinking of whom you sneezed?’

யான்‌ தும்மினேனாக அவள்‌ நூறாண்டு என வாழ்த்தினாள்‌; உடனே அதைவிட்டு யார்‌ நினைத்ததால்‌ தும்மினீர்‌? என்று கேட்டு அழுதாள்‌.

When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, “At the thought of whom did you sneeze?”

பரிமேலழகர் உரை இதுவும் அது. தும்மினேனாக வழுத்தினாள் - கூறியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, 'நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்?' என்று சொல்லிப் புலந்தழுதாள்.
விளக்கம்:
(வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான் அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இவ்வழக்கை உள் வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; நும்மையார் நினைக் கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள்,
(என்றவாறு). இது தும்மினும் குற்றமென்று கூறியது.
1318

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று

And so next time I checked my sneeze; She forthwith wept and cried,
(That woman difficult to please), ‘Your thoughts from me you hide’.

அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான்‌ தும்மலை அடக்கிக்‌ கொள்ள உம்மவர்‌ உம்மை நினைப்பதை எமக்குத்‌ தெரியாமல்‌ மறைக்கின்றீரோ என்று அழுதாள்‌.

When I suppressed my sneezing, she wept saying, “I suppose you (did so) to hide from me your own people’s remembrance of you”.

பரிமேலழகர் உரை இதுவும் அது தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, 'யார் உள்ளித் தும்மினீர்?' என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன்; அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள்.
விளக்கம்:
('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தும்மல் தோற்ற, அதனை யடக்கினேன் ; அதற்காக, நுமர் உள் ளின்மையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள்,
(என்றவாறு). இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.
1319

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று

I then began to soothe and coax, To calm her jealous mind;
‘I see’, quoth she, ‘to other folks How you are wondrous kind’

ஊடியிருந்போது அவளை ஊடல்‌ உணர்த்தி மகிழ்வித்தாலும்‌, நீர்‌ மற்ற மகளிர்க்கும்‌ இத்தன்மையானவராக ஆவீர்‌ என்று சொல்லிச்‌ சினம்‌ கொள்வாள்‌.

Even when I try to remove her dislike, she is displeased and says, “This is the way you behave towards (other women).”

பரிமேலழகர் உரை இதுவும் அது. தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர்,' என்று சொல்லி.
விளக்கம்:
('இவள் தௌ¢வித்தவழியும் தௌ¢யாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அதுதானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ் வாறு செய்வீரே யென்று சொல்லி வெகுளும்,
(என்றவாறு). இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.
1320

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று

I silent sat, but thought the more, And gazed on her. Then she
Cried out, ‘While thus you eye me o’er, Tell me whose form you see’.

அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும்‌, நீர்‌ யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம்‌ பார்க்கின்றீர்‌? என்று சினம்‌ கொள்வாள்‌.

Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, “With whose thought have you (thus) looked on my person?”

பரிமேலழகர் உரை இதுவும் அது. நினைத்து இருந்து நோக்கினும் காயும் - என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன் அவயவங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும், என்னை வெகுளாநிற்கும்; அனைத்தும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று - 'நீர் என் அவயவமனைத்தும் நோக்கினீர், அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து?'' என்று சொல்லி.
விளக்கம்:
('யான் எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்க வேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின், 'என்னுங் கருத்தால் 'அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி?' என்றாள்.'வாளாவிருத்தலும் குற்றமாயிற்று' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனது உறுப்புக்களோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணா மையை யெண்ணி நோக்க இருப்பினும், என்னுறுப்பெல்லாம் நீர் காதலித்தவர் களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி வெகுளும்,(எ-று) இது பார்க்கிலும் குற்றமென்று கரியது.


transliteration

paenniyalaar yellaarum kannin pothuunpar
nannaen paraththanin maarpu

ooti irundhthaemaath thumminaar yaamthammai
needuvaal kenpaak karindhthu

koatduppooch kootinum kaayum oruththiyaik
kaattiya kootineer yenru

yaarinum kaathalam yenraenaa ootinaal
yaarinum yaarinum yenru

immaip pirappil piriyalam yenraenaak
kannirai neerkon danal

ullinaen yenraenmatr raenmarandhtheer yenraennaip
pullaal pulaththak kanal

valuththinaal thumminaen aaka aliththaluthaal
yaarullith thummineer yenru

thummuch seruppa aluthaal numarullal
yemmai maraiththiroa yenru

thannai unarththinum kaayum pirarkkumneer
indhneerar aakuthir yenru

ninaiththirundhthu nokkinum kaayum anaiththuneer
yaarulli nokkineer yenru