Pouting 131

1301

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது

Be still reserved, decline his profferred love;
A little while his sore distress we ‘Il prove.

(ஊடும்போது அவர்‌ அடைகின்ற) துன்பநோயைச்‌ சிறிது காண்போம்‌; அதற்காக அவரைத்‌ தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.

பரிமேலழகர் உரை வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற் பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது. அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக் கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்துசென்று புல்லாதே; இத் தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக.
விளக்கம்:
(அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள். புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி? ஐகாரம் ''கடம்பூண்டொருகால் நீ வந்தை'' (கலித். குறிஞ்சி. 27) என்புழிப்போல முன்னிலை வினைவிகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக் குறிப்புக் கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.)
மணக்குடவர் உரை புலவியாவது தலைமகனோடு தலைமகள் புலந்து கூறுதல். இது வெளிப் பட்டு நிகழ்தலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்; அவ் விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக,
(என்றவாறு). இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புல்விக்குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.
1302

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்

A cool reserve is like the salt that seasons well the mess,
Too long maintained, ‘tis like the salt’s excess.

உப்பு, உணவில்‌ அளவோடு அமைந்திருப்பதைப்‌ போன்றது ஊடல்‌; ஊடலை அளவுகடந்து நீட்டித்தல்‌, அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப்‌ போன்றது.

A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.

பரிமேலழகர் உரை புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவர் சொல்லியது. புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டுமளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று - இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும்.
விளக்கம்:
(நீள விடல் - அளவறிந்துணராது. கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல்; 'சிறிது நீள விடலாகாது' என்றாள். நேர்விக்கின்றாளாகலின், 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கல்வி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல் இனிமை யுண்டாக் கும் புல்வி; அதனை நீளவிடல் அவ்வுப்பு சிறிது மிக்காற்போல் இன்னாதாம். இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்தவிடத்துப் புலவியை நீளவிடுதல் தகாதென்று அவள் கூறியது.
1303

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்

‘Tis heaping griefs on those whose hearts are grieved;
To leave the grieving one without a fond embrace.

தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித்‌ தழுவாமல்‌ விடுதல்‌, துன்பத்தால்‌ வருந்தியவரை மேலும்‌ துன்பநோய்‌ செய்து வருத்தினாற்‌ போன்றது.

For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.

பரிமேலழகர் உரை பரத்தையர் இடத்து நின்றும் வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.
விளக்கம்:
('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன்மேலும் மிக்க துன்பத்தி னைச் செய்தாற்போலும்,
(என்றவாறு).
1304

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று

To use no kind conciliating art when lover grieves,
Is cutting out the root of tender winding plant that droops.

பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமலிருத்தல்‌, முன்னமே வாடியுள்ள கொடியை அதன்‌ அடியிலே அறுத்தல்‌ போன்றது.

Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.

பரிமேலழகர் உரை இதுவும் அது. ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும்.
விளக்கம்:
('நீர் பரத்தையரிடத்தல் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற் பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நம்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை; நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும்,
(என்றவாறு). இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப்போ மென்று தலை மகள் கூறியது.
1305

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து

Even to men of good and worthy mind, the petulance
Of wives with flowery eyes lacks not a lovely grace.

நல்ல பண்புகள்‌ அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர்‌ போன்ற கண்களை உடைய மகளிரின்‌ நெஞ்சில்‌ விளையும்‌ ஊடலின்‌ சிறப்பே ஆகும்‌.

An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.

பரிமேலழகர் உரை தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே
விளக்கம்:
(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான். 'நலத்தகை நல்லார்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல். தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம்; பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல்,
(என்றவாறு). நமக்கு ஆகார் மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.
1306

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று

Love without hatred is ripened fruit;
Without some lesser strife, fruit immature.

பெரும்பிணக்கும்‌ சிறுபிணக்கும்‌ இல்லாவிட்டால்‌, காமம்‌ மிகப்‌ பழுத்த பழமும்‌ முற்றாத இளங்காயும்‌ போல்‌ பயன்படாததாகும்‌.

Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.

பரிமேலழகர் உரை இதுவும் அது. துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும்.
விளக்கம்:
(மிக முதிர்ந்திறும் 'எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் 'துனியில்லையாயின், கனியற்று' என்றும்; கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின், 'புலவியில்லையாயின் கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உணராது நீட்டிக்கின்றதுனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின், காமம் அழுகிய பழம் போலப் புளிக்கும்; காய் போலத் துவர்க்கும் ஆதலால்,
(என்றவாறு). இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.
1307

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று

A lovers’ quarrel brings its pain, when mind afraid
Asks doubtful, “Will reunion sweet be long delayed?”

கூடியிருக்கும்‌ இன்பம்‌ இனிமேல்‌ நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால்‌ ஊடியிருத்தலினும்‌ காதலர்க்கு ஒருவகைத்‌ துன்பம்‌ இருக்கின்றது.

The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.

பரிமேலழகர் உரை இதுவும் அது. புணர்வது நீடுவது
விளக்கம்:
(கொல்) அன்று கொல் என்று- இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக்'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன்கண்ணும் ஒரு துன்பம் உண்டு; புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறு தலால்,
(என்றவாறு). இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்க, தலைமகன் அது கண்டு சொல்லியது.
1308

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி

What good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures?

நம்மால்‌ இவர்‌ வருந்தினார்‌ என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர்‌ இல்லாதபோது, வருந்துவதால்‌ பயன்‌ என்ன?

What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?

பரிமேலழகர் உரை உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது. நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினையறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்?
விளக்கம்:
('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. 'இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை,' எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தாரென்று நினைத்து, அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகிய விடத்து,
(என்றவாறு). இஃது உணர்ப்புவயின்வரராவூடற்கண் தலைமகன் புலந்துழி, அதனை யறிந்து அகம்புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.
1309

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது

Water is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love.

நீரும்‌ நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல்‌, ஊடலும்‌ அன்பு செலுத்துவோரிடத்தில்‌ கொள்வதே இன்பமானது.

Like water in the shade, dislike is delicious only in those who love.

பரிமேலழகர் உரை இதுவும் அது. நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது; ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அதுபோலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது.
விளக்கம்:
(நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையுடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்; அதுபோல, புலவியும் அன்புடையார்மாட்டேயாயின், இனி தாம்,
(என்றவாறு)
1310

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா

Of her who leaves me thus in variance languishing,
To think within my heart with love is fond desire.

ஊடல்‌ கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல்‌ வாடவிடுகின்றவரோடு என்‌ நெஞ்சம்‌ கூடியிருப்போம்‌ என்று முயல்வதற்குக்‌ காரணம்‌ அதன்‌ ஆசையே.

It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her owndislike.

பரிமேலழகர் உரை இதுவும் அது. ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும், விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை.
விளக்கம்:
(அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக் கூட்டம் முடியாது' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்)என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடு வேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால்,
(என்றவாறு). இது புலவி நீங்க வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புல்வி தீர்வாளாய்ச் சொல்லியது.


transliteration

pullaa thiraaap pulaththai avarurum
avarurum allalnoi kaankachiirithu

uppamaindh thatrraal pulavi athusirithu
mikkatrraal neela vidal

alandhthaarai allalnoi seithatrraal thammaip
pulandhthaaraip pullaa vidal

ooti yavarai unaraamai vaatiya
valli muthalarindh thatrru

nalaththakai nallavarkku yaeyer pulaththakai
pooanna kannaar akaththu

thuniyum pulaviyum illaayin kaamam
kaniyum karukkaayum atrru

oodalin untaangkoar thunpam punarvathu
needuva thanrukol yenru

nothal yevanmatrru nondhthaaraenru akhthariyum
kaathalar illaa vali

neerum nilalathu inithae pulaviyum
veelunar kannae inithu

oodal unangka viduvaaroadu yennaenjcham
kooduvaem yenpathu avaa