குறள் 1303

புலவி

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்

alandhthaarai allalnoi seithatrraal thammaip
pulandhthaaraip pullaa vidal


Shuddhananda Bharati

Bouderic

To leave the sulker unembraced
Is to grieve the one sorely grieved.


GU Pope

Pouting

'Tis heaping griefs on those whose hearts are grieved;
To leave the grieving one without a fond embrace.

For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.


Mu. Varadarajan

தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித்‌ தழுவாமல்‌ விடுதல்‌, துன்பத்தால்‌ வருந்தியவரை மேலும்‌ துன்பநோய்‌ செய்து வருத்தினாற்‌ போன்றது.


Parimelalagar

பரத்தையர் இடத்து நின்றும் வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.
விளக்கம்:
('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன்மேலும் மிக்க துன்பத்தி னைச் செய்தாற்போலும்,
(என்றவாறு).