குறள் 1311

புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

paenniyalaar yellaarum kannin pothuunpar
nannaen paraththanin maarpu


Shuddhananda Bharati

Feigned anger

I shrink to clasp you bosom lewd
To the gaze of all ladies exposed.


GU Pope

Feigned Anger

From thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace!

You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.


Mu. Varadarajan

பரத்தமை உடையாய்‌! பெண்தன்மை உடையவர்‌ எல்லாரும்‌ தம்தம்‌ கண்களால்‌ பொதுப்‌ பொருளாகக்‌ கொண்டு நுகர்கின்றார்கள்‌; ஆகையால்‌ உன்‌ மார்பைப்‌ பொருந்தேன்‌.


Parimelalagar

உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது. பரத்த- பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்-நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன்.
விளக்கம்:
(கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணக்கமாயிற்று.)


Manakkudavar

மேற்கு புலவி நுணுக்கமாவது தலைமகத்தென்டுத் தவறிலவாயினும், தன் காதல் மிகுதியால் சொல்லெச்சத்தினானும் கு, க, பச்சத்தினானும் வேறுபடப் பொருள் கொண்டு, தலைமகள் புலந்து கூறுதல். இது செவ்வியிற்றோன்று மாதலின் நுணுக்கமாயிற்று. (இதன் பொருள்) பரத்தமையை யுடையாய்! நின் மார்பைப் பெண்மை யுடையா ரெல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர்; அத னால், யான் அதனைத் தீண்டேன்,
(என்றவாறு). இது தலைமகள் புல்விகண்டு என் மாட்டுக் குற்றமியாதோவென்று கூறிய தலைமகற்கு அவள் கூறியது.