குறள் 1318

புலவி நுணுக்கம்

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று

thummuch seruppa aluthaal numarullal
yemmai maraiththiroa yenru


Shuddhananda Bharati

Feigned anger

I repressed sneeze; she wept crying
"Your thoughts from me you are hiding".


GU Pope

Feigned Anger

And so next time I checked my sneeze; She forthwith wept and cried,
(That woman difficult to please), ‘Your thoughts from me you hide'.

When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you".


Mu. Varadarajan

அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான்‌ தும்மலை அடக்கிக்‌ கொள்ள உம்மவர்‌ உம்மை நினைப்பதை எமக்குத்‌ தெரியாமல்‌ மறைக்கின்றீரோ என்று அழுதாள்‌.


Parimelalagar

இதுவும் அது தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, 'யார் உள்ளித் தும்மினீர்?' என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன்; அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள்.
விளக்கம்:
('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தும்மல் தோற்ற, அதனை யடக்கினேன் ; அதற்காக, நுமர் உள் ளின்மையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள்,
(என்றவாறு). இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.