Reserve Overcome 126

1251

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு

Of womanly reserve love’s axe breaks through the door,
Barred by the bolt of shame before.

நாணம்‌ என்னும்‌ தாழ்ப்பாள்‌ பொருந்திய நிறை என்று சொல்லப்படும்‌ கதவைக்‌ காமம்‌ ஆகிய கோடரி உடைத்து விடுகின்றது,

The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.

பரிமேலழகர் உரை நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது; இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை.
விளக்கம்:
(கணிச்சி - குந்தாலி. நானுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.)
மணக்குடவர் உரை நிறையழிதலாவது வேட்கை மிகுதியால் தன் நிலையழிந்து தலைமகள் கூறுதல். நெஞ்சின் மிக்கது புலப்படுமாதலான், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) காமமாகியமழு உடையாநின்றது; நாணமாகிய தாழில் அடைக் கப்பட்ட அறிவாகிய கதவினை,
(என்றவாறு). இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக் குத் தலைமகள் கூறியது.
1252

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

What men call love is the one thing of merciless power;
It gives my soul no rest, e’en in the midnight hour.

காமம்‌ என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம்‌ இல்லாதது; அஃது என்‌ நெஞ்சத்தை நள்ளிரவிலும்‌ ஏவல்‌ கொண்டு ஆள்கின்றது.

Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.

பரிமேலழகர் உரை நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும்' என்றாட்குச் சொல்லியது. யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடையாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது.
விளக்கம்:
('ஓ' என்பது இரக்கக் கூறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் ?- தலைமகன்பாற் செலவிடுத்தல் தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும், அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று ; என்னெஞ் சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில் கொள்ளாநின்றது,
(என்றவாறு). தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர் மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.
1253

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்

I would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign.

யான்‌ காமத்தை என்னுள்‌ மறைக்க முயல்வேன்‌; ஆனால்‌ அதுவே என்‌ குறிப்பின்படி நிற்காமல்‌ தும்மல்போல்‌ தானே வெளிப்பட்டு விடுகின்றது.

I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.

பரிமேலழகர் உரை 'மகளிர் காமம் மறைக்கப்படும்,' என்றாட்குச் சொல்லியது. காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல்போல வௌ¢ப்பட்டே விடா நின்றது.
விளக்கம்:
('மன்' ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் - இரங்கற்கண் வந்தது. தும்மல் அடங்காதாற்போல அடங்குகின்றதில்லை" என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காமத்தை யான் அடக்கக்கருதுவேன்; அவ்வாறு செய்யவும், அது தும்மல் தோன்றுமாறு போல், என் குறிப்பின்றியும் தோன்றா நின்றது,
(என்றவாறு). இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
1254

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்

In womanly reserve I deemed myself beyond assail;
But love will come abroad, and casts away the veil.

யான்‌ இதுவரையில்‌ நிறையோடிருப்பதாக எண்ணிக்‌ கொண்டிருந்தேன்‌; ஆனால்‌, என்‌ காமம்‌ என்னுள்‌ மறைந்திருத்தலைக்‌ கடந்து மன்றத்தில்‌ வெளிப்படுகின்றது.

I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.

பரிமேலழகர் உரை இதுவும் அது. யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வௌ¢ப்படா நின்றது.
விளக்கம்:
(மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன. மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யானே நிறையுடையே னென்றிருப்பன் , இப்படி யிருக்கவும், என் காமமானது மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது, (எ-று). இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ் வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.
1255

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று

The dignity that seeks not him who acts as foe,
Is the one thing that loving heart can never know.

தம்மை வெறுத்து நீங்கியவரின்பின்‌ செல்லாமல்‌ மானத்தோடு நிற்கும்‌ பெருந்தகைமை, காமநோய்‌ உற்றவர்‌ அறியும்‌ தன்மையது அன்று.

The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.

பரிமேலழகர் உரை 'நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம்,' என்றாட்குச் சொல்லியது. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை. தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காம நோயினை உறாதார் அறிவதொன்று அன்றி, உற்றார் அறிவதொன்று அன்று.
விளக்கம்:
(இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காமநோய் உறாதார் . மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்மை யிகழ்ந்தார் பின் செல்லாத பெரிய தகைமை, காம நோயுற்றாரால் அறிவதொன்று அன்று,
(என்றவாறு). இது தம்மை யிகழ்ந்து போனவர் பின் சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
1256

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்

My grief how full of grace, I pray you see!
It seeks to follow him that hateth me.

வெறுத்து நீங்கிய காதலரின்பின்‌ செல்ல விரும்பிய நிலையில்‌ இருப்பதால்‌ என்னை அடைந்த இந்தக்காமநோய்‌ எத்தன்மையானது? அந்தோ?

The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?

பரிமேலழகர் உரை 'நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம்,' என்றாட்குச் சொல்லியது. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை. தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காம நோயினை உறாதார் அறிவதொன்று அன்றி, உற்றார் அறிவதொன்று அன்று.
விளக்கம்:
(இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காமநோய் உறாதார் . மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செறுத்தார் பின்னே யான் சேறலை வேண்டுதலால், என்னை யடைந்ததுயர் எத்தன்மைத்து ; நன்றாக இருக்கின்றது,
(என்றவாறு) இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலை மகளை நோக்கி, இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல் லியது.
1257

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்

, No sense of shame my gladdened mind shall prove,
When he returns my longing heart to bless with love.

நாம்‌ விரும்பிய காதலர்‌ காமத்தால்‌ நமக்கு விருப்பமானவற்றைச்‌ செய்வாரானால்‌, நாணம்‌ என்று சொல்லப்படும்‌ ஒரு பண்பையும்‌ அறியாமலிருப்போம்‌.

I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).

பரிமேலழகர் உரை பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது. பேணியார் காமத்தாற் பெட்ப செயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம்.
விளக்கம்:
('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக, விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின்,
(என்றவாறு) அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகாதென்றவாறு.
1258

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை

The words of that deceiver, versed in every wily art,
Are instruments that break through every guard of woman’s heart!

நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும்‌ படையாக இருப்பது. பலமாயங்களில்‌ வல்ல கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி அன்றோ?

Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?

பரிமேலழகர் உரை இதுவும் அது. நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணி மொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை?
விளக்கம்:
(பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக் கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக் கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பல் மாயக் கள்வன்' என்றாள். பணிமொழி தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன் அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாது ஒழியுமோ?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பல பொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ? நமது பெண்மையை அழிக்குங் கருவி,
(என்றவாறு). இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் பெண்மையைக் கெடுக்கின்றது; அல்லது கெடா தென்று தலைமகள் கூறியது.
1259

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு

‘I ‘ll shun his greeting’; saying thus with pride away I went:
I held him in my arms, for straight I felt my heart relent.

ஊடுவேன்‌ என்று எண்ணிக்‌ கொண்டு சென்றேன்‌; ஆனால்‌ என்‌ நெஞ்சம்‌ என்னைவிட்டு அவரோடு கூடுவதைக்‌ கண்டு தழுவினேன்‌.

I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mindbegan to unite with him!

பரிமேலழகர் உரை இதுவும் அது புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன்.
விளக்கம்:
(வாயாமை புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன், நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு,
(என்றவாறு). இஃது ஊடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என் மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.
1260

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்

“We ‘ll stand aloof and then embrace’: is this for them to say,
Whose hearts are as the fat that in the blaze dissolves away?

கொழுப்பைத்‌ தீயில்‌ இட்டாற்‌ போன்ற உருகும்‌ நெஞ்சு உடைய என்னைப்போன்றவர்க்கு, ‘இசைந்து ஊடிநிற்போம்‌’ என்று ஊடும்‌ தன்மை உண்டோ?

Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?

பரிமேலழகர் உரை
விளக்கம்:
(புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ ?
(என்றவாறு).


transliteration

kaamak kanichi utaikkum niraiyaennum
naanuththaal veelththa kathavu

kaamam yenavonno kanninraen naenjchaththai
yaamaththum aalum tholil

maraippaenman kaamaththai yaano kurippinrith
thummalpol thonri vidum

niraiyutaiyaen yenpaenman yaanoyen kaamam
maraiyirandhthu manru padum

setrraarpin sellaap paerundhthakaimai kaamanoi
utrraar arivathonru anru

setrravar pinsaeral vaenti aliththaroa
yetrraennai utrra thuyar

naanaena onno ariyalam kaamaththaal
paeniyaar paetpa seyin

panmaayak kalvan panimoli annonam
paenmai utaikkum patai

pulappal yenachsenraen pullinaen naenjcham
kalaththal uruvathu kandu

ninandhtheeyil itdanna naechinaarkku untoh
punarndhthooti nitrpaem yenal