Soliloquy 125

1241

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து

My heart, canst thou not thinking of some med’cine tell,
Not any one, to drive away this grief incurable?

நெஞ்சே! (காதலால்‌ வளர்ந்த) இத்‌ துன்பநோயைத்‌ தீர்க்கும்‌ மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப்‌ பார்த்து எனக்குச்‌ சொல்லமாட்டாயோ?

O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?

பரிமேலழகர் உரை தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது. நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன்; எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல்.
விளக்கம்:
(எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்,' என்றாள்.)
மணக்குடவர் உரை நெஞ்சொடுகிளத்தலாவது நெஞ்சு முன்னிலையாகத் தலைமகள் சொல்லு தல். காதலடக்க லாற்றாதார் பிறர்க்குச் சொல்லுதற்குநாணித் தன்னெஞ்சிற்குச் சொல்லி யாற்று தலான், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தா வது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய்,
(என்றவாறு). இஃது ஆற்றுதலரிதென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சில்கூற் றென்று கொள்ளப்படும்.
1242

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு

Since he loves not, thy smart
Is folly, fare thee well my heart!

என்‌ நெஞ்சே! வாழ்க! அவர்‌ நம்மிடம்‌ காதல்‌ இல்லாதவராக இருக்க, நீ மட்டும்‌ அவரை நினைந்து வருந்துவதும்‌ உன்‌ அறியாமையே!

May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.

பரிமேலழகர் உரை தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது. என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; காதல் இலராக நீ நோவது - அவா நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே; பிறிதில்லை.
விளக்கம்:
('நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பது அறியலாம்; அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய்; இது, நீ செய்து கொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு. 'யாம்' அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அவர் ந. மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை,
(என்றவாறு). இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.
1243

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்

What comes of sitting here in pining thought, O heart? He knows
No pitying thought, the cause of all these wasting woes.

நெஞ்சே(என்னுடன்‌)இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்‌? இந்தத்‌ துன்பநோயை உண்டாக்கியவரிடம்‌ இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும்‌ தன்மை இல்லையே!

O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.

பரிமேலழகர் உரை இதுவும் அது. நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே, அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்துபடுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் - இப்பயுள் நோய் செய்தார்மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது.
விளக்கம்:
('நம்மாட்டு அருளுடையர், அன்மையின், தாமாக வாரார்; நாம் சேறலே இனித் தகுவது' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து, அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு ? வருத்தமுற்று நினைத்தால் நமக்குச் சிறுமை செய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின்,
(என்றவாறு). இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது.
1244

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று

O rid me of these eyes, my heart; for they,
Longing to see him, wear my life away.

நெஞ்சே! நீ அவரிடம்‌ செல்லும்‌ போது என்‌ கண்களையும்‌ உடன்‌ கொண்டு செல்வாயாக; அவரைக்‌ காண வேண்டும்‌ என்று இவை என்னைப்‌ பிடுங்கித்‌ தின்கின்றன.

O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.

பரிமேலழகர் உரை இதுவும் அது. நெஞ்சே, கண்ணும் கொளச் சேறி - நெஞ்சே நீஅவர்பாற் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - அன்றி நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பன போன்று நலியா நிற்கும்.
விளக்கம்:
('கொண்டு' என்பது, 'கொள' எனத் திரிந்து நின்றது. தின்னும் என்பது இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும் என்பதாம்: என்றது, தான் சேறல் குறித்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நெஞ்சே! நீ அவர் மாட்டுச் செல்லுவையாயின், இக்கண்களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக; அவரைக்காணலுற்று இவை என் னைத் தின்பனபோல் நலியா நின்றன,
(என்றவாறு). கொள் - பார்க்க.
1245

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்

O heart, as a foe, can I abandon utterly
Him who, though I long for him, longs not for me?

நெஞ்சே! யாம்‌ விரும்பி நாடினாலும்‌ எம்மை நாடாத அவர்‌ நம்மை வெறுத்துவிட்டார்‌ என்று எண்ணிக்‌ கை விட முடியுமோ?

O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?

பரிமேலழகர் உரை இதுவும் அது. நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர்யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.
விளக்கம்:
(உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தருவது' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ ?
(என்றவாறு). உறுதல் - விரைந்துறு தல், தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.
1246

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு

My heart, false is the fire that burns; thou canst not wrath maintain,
If thou thy love behold, embracing, soothing all thy pain.

என்‌ நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல்‌ உணர்த்த வல்ல காதலரைக்‌ கண்டபோது நீ பிணங்கி உணரமாட்டாய்‌! பொய்யான சினங்கொண்டு காய்கின்றாய்‌.

O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased andcontinue to be so. Nay, your displeasure is (simply) false.

பரிமேலழகர் உரை தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது. என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கண்டால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டா நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயா நின்றாய்; இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக.
விளக்கம்:
('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி, அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என்னெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறி ந்து வைத்தும், அவரைக் கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை ; இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய்,
(என்றவாறு).
1247

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு

Or bid thy love, or bid thy shame depart;
For me, I cannot bear them both, my worthy heart!

நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும்‌ பொறுத்துக்‌ கொண்டிருக்க என்னால்‌ முடியாது

O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.

பரிமேலழகர் உரை நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது. நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே; ஒன்று காமம் விடு - ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காமவேட்கையை விடு; ஒன்று நாண் விடு - ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன்.
விளக்கம்:
('யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது 'நல்நெஞ்சே' என்றது, 'இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிறுண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன்,' என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எனக்கு நல்ல நெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும் ; ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்; யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறு த்தலரிது.
(என்றவாறு). இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக்கருதிய தலை மகள் நாணந்தடுத்தமைகண்டு கூறியது.
1248

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு

Thou art befooled, my heart, thou followest him who flees from thee;
And still thou yearning criest: ‘He will nor pity show nor love to me.’

என்‌ நெஞ்சே! பிரிவுத்‌ துன்பத்தால்‌ வருத்தி அவர்‌ வந்து அன்பு செய்யவில்லையே என்று ஏங்கிப்பிரிந்தவரின்‌ பின்‌ செல்கின்றாய்‌! நீ பேதை.

You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.

பரிமேலழகர் உரை
விளக்கம்:
(ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி நம்மை விட்டுப் போனவர் பின்னே போகாநின்றாய், பேதையாயிருந்தாய். இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக் கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.
1249

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

My heart! my lover lives within my mind;
Roaming, whom dost thou think to find?

என்‌ நெஞ்சே! காதலர்‌ உன்‌ உள்ளததில்‌ உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம்‌ தேடிச்‌ செல்கின்றாய்‌?

O my soul! to whom would you repair, while the dear one is within yourself?

பரிமேலழகர் உரை இதுவும் அது. என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து?
விளக்கம்:
('உள்ளம்' என் புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்ற வரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை உடைத்து அதனை ஒழி,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என்னெஞ்சே! நன்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்தி லே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய்,
(என்றவாறு). இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.
1250

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்

O If I should keep in mind the man who utterly renounces me,
My soul must suffer further loss of dignity.

நம்மோடு பொருந்தியிருக்காமல்‌ கைவிட்டுச்‌ சென்ற காதலரை நெஞ்சில்‌ வைத்திருக்கும்போது, இன்னும்‌ மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்‌.

If Iretain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward)beauty that remains.

பரிமேலழகர் உரை 'அவரை மறந்து ஆற்றல் வேண்டும்' என்பதுபடச் சொல்லியது. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்போம்.
விளக்கம்:
("குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்" (குறுந். கடவுள் வாழ்த்து) என்புழிப்போல 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும், நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி 'நிறன் நிறையும் இழப்போம்,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ் சகத்தே யுடையோமாயின், முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம் ; ஆதலான் மறத்தலே கருமம்,
(என்றவாறு). ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை . இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.


transliteration

ninaiththonru sollaayo naenjsae yenaiththonrum
yevvanoi theerkkum marundhthu

kaathal avarilar aakanee novathu
paethaimai vaaliyaen naenjsu

irundhthulli yenparithal naenjsae parindhthullal
paithalnoi seithaarkan il

kannum kolachsaeri naenjsae ivaiyaennaith
thinnum avarkkaanal utrru

setrraar yenakkai vidaluntoh naenjsaeyaam
utrraal uraaa thavar

kalandhthunarththum kaathalark kantaatr pulandhthunaraai
poikkaaivu kaaithiyen naenjsu

kaamam viduonno naanvidu nannaenjsae
yaano poraeniv virandu

parindhthavar nalkaaraenru yaengkip pirindhthavar
pinselvaai paethaiyen naenjsu

ullaththaar kaatha lavaraal ullinee
yaarulaich saeriyaen naenjsu

thunnaath thurandhthaarai naenjchaththu utaiyaemaa
innum ilaththum kavin