Wasting Away 124

1231

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்

Thine eyes grown dim are now ashamed the fragrant flow’rs to see,
Thinking on him, who wand ring far, leaves us in misery.

இத்துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத்‌ தொலைவில்‌ உள்ள நாட்டுக்குச்‌ சென்ற காதலரை நினைந்து அழுதமையால்‌ கண்கள்‌ அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணிவிட்டன.

While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (thesight of) fragrant flowers.

பரிமேலழகர் உரை ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.
விளக்கம்:
(நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்,' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை உறுப்புநலனழிதலாவது தலைமகளது உறுப்புக்கள் நலனழிந்தமை கூறுதல். காதமிக்கு இரங்குவார் அக்காதலை அயலாரறியாமல் அடக்கின காலத்து வெம்மை யுற்ற கொடிபோல், அனைத்துறுப்பும் வாடுதலான், இது பொழுதுகண்டிரங்கலின் பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி, நெடு நெறிக்கண் சென்றாரை நினைத்து, கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணாநின்றன,
(என்றவாறு). பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றவா றாயிற்று.
1232

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்

The eye, with sorrow wan, all wet with dew of tears,
As witness of the lover’s lack of love appears.

பசலைநிறம்‌ அடைந்து நீர்‌ சொரியும்‌ கண்கள்‌, நாம்‌ விரும்பிய காதலர்‌ நமக்கு அன்பு செய்யாத தன்மையைப்‌ (பிறர்க்குச்‌, சொல்வனபோல்‌ உள்ளன.

The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.

பரிமேலழகர் உரை இதுவும் அது. பசந்து பணி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நம்மால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவது போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும்.
விளக்கம்:
(சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவன போ லாகாநின்றன ; பசப்புற்று நீர் சொரிகின்ற கண்கள்,
(என்றவாறு). இது தலை மகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகாநின்ற தென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.
1233

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்

These withered arms, desertion’s pangs abundantly display,
That swelled with joy on that glad nuptial day.

கூடியிருந்த காலத்தில்‌ மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள்‌, (இப்போது மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவைபோல்‌ உள்ளன.

The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly(to the public).

பரிமேலழகர் உரை இதுவும் அது. மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று; இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்தவதுபோல மெலியா நின்றன; இது தகாது.
விளக்கம்:
('அன்றும் அவ்வாறு பூரித்து, இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.) _
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காதலர் கூடின் நாட்களிற் பூரித்ததோள்கள், அவர் நீங்கின மையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பனபோ லாகாநின்றன,
(என்றவாறு). கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனது தோள் வாட்ட முற்றது கண்ட தோழிக்குச் சொல்லியது.
1234

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்

When lover went, then faded all their wonted charms,
And armlets’ golden round slips off from these poor wasted arms.

துணைவர்‌ விட்டு நீங்கியதால்‌ பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள்‌, பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும்‌ கழலச்‌ செய்கின்றன.

In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.

பரிமேலழகர் உரை இதுவும் அது. துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றி, பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும். இன்று அதற்குமேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன; இவை இங்ஙனம் செயற்பாலவல்ல.
விளக்கம்:
(பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால் செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனி அவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது,
(என்றவாறு). பசுத்த வளை - மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலே யன்றி மெலி வதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
1235

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்

These wasted arms, the bracelet with their wonted beauty gone,
The cruelty declare of that most cruel one.

வளையல்களும்‌ கழன்று பழைய அழகும்‌ கெட்டு வாடிய தோள்கள்‌,(என்‌ துன்பம்‌ உணராத) கொடியவரின்‌ கொடுமையைப்‌ பிறர்‌ அறியச்‌ சொல்கின்றன.

The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty ofthe pitiless one.

பரிமேலழகர் உரை இதுவும் அது. கொடியார் கொடுமை உரைக்கும் - கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியொடு தொல் கவின் வாடிய தோள் - வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை?
விளக்கம்:
('உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன, வளையோடே கூடப் பழைய வாகிய அழகினை யிழந்த தோள்களும்,
(என்றவாறு). இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை யியற்பழித்துத் தோழி கூறியது.
1236

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து

I grieve, ‘tis pain to me to hear him cruel chid,
Because the armlet from my wasted arm has slid.

வளையல்கள்‌ கழன்று தோள்களும்‌ மெலிவடைவதால்‌ (அவற்றை காண்போர்‌) காதலரைக்‌ கொடியவர்‌ என்று கூறுவதைக்‌ கேட்டு வருந்துகின்றேன்‌.

I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.

பரிமேலழகர் உரை தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தொடியொடு தோற்நெகிழ-யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய, அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன்.
விளக்கம்:
(ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வளையோடே தோள்கள் பண்டு போல் இருக்காது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்; நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து, (எ - று.) இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றுவலென்பது படத் தலை மகள் சொல்லியது.
1237

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து

My heart! say ought of glory wilt thou gain,
If to that cruel one thou of thy wasted arms complain?

நெஞ்சே! கொடியவர்‌ என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என்‌ மெலிந்த தோள்களின்‌ ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால்‌ பெருமை அடைவாயோ?

Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?

பரிமேலழகர் உரை அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது. நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவர் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினாள் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி: பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின அதனை ஒப்பதில்லை.
விளக்கம்:
('கொடியார்க்கு' என்பதும் கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச் சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடா நின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்; ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; வந்தால், இவையெல்லாம் நீங்கும்; நீங்க, அஃது எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால், 'பாடு பெறுதியோ?' என்றாள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனது தோள் வாடுத லானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி, நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?
(என்றவாறு) இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.
1238

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்

One day the fervent pressure of embracing arms I checked,
Grew wan the forehead of the maid with golden armlet decked.

தழுவிய கைகளைத்‌ தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின்‌ நெற்றி, (அவ்வளவு சிறிதாகிய பிரிவையும்‌ பொறுக்காமல்‌) பசலை நிறம்‌ அடைந்தது.

When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.

பரிமேலழகர் உரை வினைமுடித்து மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது. முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒரு ஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது; அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ?
விளக்கம்:
('இனிக் கடிதிற் சொல்லவேண்டும்' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யான் பிரிவதாக நினைத்து, அவள் முயங்கியகைகளை நீக்கினே னாக; அதனை யறிந்து, பசுத்த தொடியினையுடைய பேதை நுதல் பசந்தது, (). 9
1239

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்

As we embraced a breath of wind found entrance there;
The maid’s large liquid eyes were dimmed with care.

தழுவுதலுக்கு இடையே குளிர்ந்த காற்று நுழையக்‌ காதலியின்‌ பெரிய மழை போன்ற கண்கள்‌ பசலைநிறம்‌ அடைந்தன.

When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

பரிமேலழகர் உரை இதுவும் அது. முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக்கண்கள் பசப்புற்றன; அத்தன்மையாவன கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன?
விளக்கம்:
(தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யான் பிரிவதாக நினைத்து, முயக்கத்தின் கண்ணே எனது உடம் பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று உடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன,
(என்றவாறு). இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.
1240

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு

The dimness of her eye felt sorrow now,
Beholding what was done by that bright brow.

காதலியின்‌ ஒளிபொருந்திய நெற்றி, பசலை நிறம்‌ உற்றதைக்‌ கண்டு, அவளுடைய கண்களின்‌ பசலையும்‌ துன்பம்‌ அடைந்துவிட்டது,

Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?

பரிமேலழகர் உரை இதுவும் அது. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாக ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு.
விளக்கம்:
('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது; யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்,' எனத், தன் வன்மையும் தன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம். ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும்; யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒள்ளியநுதல் பசந்தது கண்டு, கண்ணிலுண்டான பசலை கலங் கற்று ,
(என்றவாறு)


transliteration

sirumai namakkoliyach saetsenraar ulli
narumalar naanina kan

nayandhthavar nalkaamai solluva polum
pachandhthu panivaarum kan

thanandhthamai saala arivippa polum
manandhthanaal veengkiya thol

panaineengkip paindhthoti chorum thunaineengkith
tholkavin vaatiya thol

kotiyaar kodumai uraikkum thotiyodu
tholkavin vaatiya thol

thotiyodu tholnaekila noval avaraik
kotiyar yenakkooral nondhthu

paadu paeruthiyo naenjsae kotiyaarkken
vaaduthot poochal uraiththu

muyangkiya kaikalai ookkap pachandhthathu
paindhthotip paethai nuthal

muyakkitaith thanvali polap pachapputrra
paethai paerumalaik kan

kannin pachappo paruvaral yeithinrae
onnuthal seithathu kandu