Lamentations at Eventide 123

1221

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது

Thou art not evening, but a spear that doth devour
The souls of brides; farewell, thou evening hour!

பொழுதே! நீ மாலைக்காலம்‌ அல்லை: (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்‌) மகளிரின்‌ உயிரை உண்ணும்‌ முடிவுக்‌ காலமாக இருக்கின்றாய்‌!

Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married)women.

பரிமேலழகர் உரை பொழுதொடு புலந்து சொல்லியது. பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய்.
விளக்கம்:
(முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். 'வாழி' என்பது குறிப்புச் சொல். "வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை" (கலித். நெய்தல். 2 ) என்றார்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். 'வேலை' என்பதற்கு வேலாயிருந்தாய் 'என்பாரும்' உளர்.)
மணக்குடவர் உரை பொழுதுகண்டிரங்கலாவது மாலைப்பொழுது கண்டு தலைமகள் வருந்துதல். ஏனைப்பொழுதில் வருத்தமிலரோவெனின், பிரியப்பட்டார்க்கு எல்லாக் காலமும் வருத்தமுளவாயினும், விடியலும் நண்பகலும் போலாது மாலைப்பொழுது வருத்த மிகுதலால், இது கூறப்பட்டது. (இதன் பொருள்) பொழுதே! நீ வெப்பமுடையை யான்மையான், மாலையோ எனின், அல்லை; முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகிய வொரு வேலாயிருந்தாய்,
(என்றவாறு) இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.
1222

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை

Thine eye is sad; Hail, doubtful hour of eventide!
Of cruel eye, as is my spouse, is too thy bride?

மயங்கிய மாலைப்பொழுதே! நீயும்‌ எம்மைப்போல்‌ துன்பப்படுகின்றாயே! உன்‌ துணையும்‌ எம்‌ காதலர்‌ போல்‌ இரக்கம்‌ அற்றதோ?

A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.

பரிமேலழகர் உரை தன்னுட்கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது. மருள் வாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை - நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம் கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணைபோல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக.
விளக்கம்:
(மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை,' என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப்போல் வன்கண்மையை யுடைத்தோ நின் துணையும்,
(என்றவாறு). இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.
1223

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்

With buds of chilly dew wan evening’s shade enclose;
My anguish buds space and all my sorrow grows.

பனி தோன்றிய பசந்த நிறம்கொண்ட மாலைப்பொழுது எனக்கு வருத்தம்‌ ஏற்பட்டுத்‌ துன்பம்‌ மேன்மேலும்‌ வளரும்படியாக வருகின்றது.

The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.

பரிமேலழகர் உரை ஆற்றல்வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்துவந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்து பாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒருகாலைக்கு ஒரு கால் மிக வாரா நின்றது.
விளக்கம்:
(குளிர்ச்சி தோன்ற மயங்கிவரு மாலை என்னுஞ் செம்பொருள் இக் குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை?' என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நெருகல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது, இன்றும் எனக்கு வெறுப்புத் தோன்றி வருத்தம் மிகும்படியாக வாராநின்றது,
(என்றவாறு). இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.
1224

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்

When absent is my love, the evening hour descends,
As when an alien host to field of battle wends.

காதலர்‌ இல்லாத இப்போது, கொலை செய்யும்‌ இடத்தில்‌ பகைவர்‌ வருவதுபோல்‌ மாலைப்பொழுது(என்‌ உயிரைக்‌ கொள்ள, வருகின்றது.

In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.

பரிமேலழகர் உரை இதுவும் அது. மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது.
விளக்கம்:
(ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனியான் ஆற்றுமாறு என்னை?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காதலரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக்களத்துப் பகைவரைப்போல் வரும்,
(என்றவாறு) இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக் குத் தலைமகள் காரணங்கூறியது.
1225

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை

O morn, how have I won thy grace? thou bring’st relief
O eve, why art thou foe! thou dost renew my grief.

யான்‌ காலைப்பொழுதிற்குச்‌ செய்த நன்மை என்ன? (என்னைத்‌ துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச்‌ செய்த பகையான தீமை என்ன.

What good have I done to morning (and) what evil to evening?

பரிமேலழகர் உரை இதுவும் அது. காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள், யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது? மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது?
விளக்கம்:
(கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்?' என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காதலர் பிரிவதன் முன்னம் பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ? அவரோடு இன்ப நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?
(என்றவாறு). இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.
1226

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்

The pangs that evening brings I never knew,
Till he, my wedded spouse, from me withdrew.

மாலைப்பொழுது இவ்வாறு துன்பம்‌ செய்யவல்லது என்பதைக்‌ காதலர்‌ என்னைவிட்டு அகலாமல்‌ உடனிருந்த காலத்தில்‌ யான்‌ அறியவில்லை.

Previous to my husband’s departure, I know not the painful nature of evening.

பரிமேலழகர் உரை இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை?' என்றாட்குச் சொல்லியது. மாலை நோய் செய்தல் - முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ் செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ் செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் - காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். 'இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்; அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்;' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மாலைப்பொழுது நோய் செய்தலை , என்னோடு கூடினவர் பிரி யாத காலத்தே அறியப் பெற்றிலேன்; அறிந்தேனாயின், இது நோய் செய்யும் மென்று கூறியிருப்பேன்,
(என்றவாறு). இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.
1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்

My grief at morn a bud, all day an opening flower,
Full-blown expands in evening hour.

இந்தக்‌ காமநோய்‌, காலைப்பொழுதில்‌ அரும்பாய்த்‌ தோன்றி, பகற்பொழுதெல்லாம்‌ பேரரும்பாய்‌ வளர்ந்து மாலைப்பொழுதில்‌ மலராகின்றது

This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.

பரிமேலழகர் உரை மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை?' என்றாட்குச் சொல்லியது. இந்நோய் - இக்காம நோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து, மாலை மலரும் - மாலைப் பொழுதின் கண் மலராநிற்கும்.
விளக்கம்:
(துயிலெழுந்த பொழுதாகலின் கனவின் கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும், தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகா நின்றது,' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பி, பகற்பொழு தெல்லாம் முகிழ்முகிழ்த்து, மாலைக்காலத்தே மலராநின்றது,
(என்றவாறு).
1228

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை

The shepherd’s pipe is like a murderous weapon, to my ear,
For it proclaims the hour of ev’ning’s fiery anguish near.

ஆயனுடைய புல்லாங்குழல்‌, நெருப்புப்போல்‌ வருந்தும்‌ மாலைப்‌ பொழுதிற்குத்‌ தூதாகி என்னைக்‌ கொல்லும்‌ படையாக வருகின்றது.

The shepherd’s flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays

பரிமேலழகர் உரை இதுவும் அது. ஆயன் குழல் - முன்னெல்லாம் இனிதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும் படை - அது வந்து என்னைக் கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று.
விளக்கம்:
(பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங் குழலோ ?
(என்றவாறு). இப்பொழுது வருத்துதலின், படை என்றாள்.
1229

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து

If evening’s shades, that darken all my soul, extend;
From this afflicted town will would of grief ascend.

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும்‌ மயங்கி என்னப்போல்‌ துன்பத்தால்‌ வருந்தும்‌.

When night comes on confusing (everyone’s) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.

பரிமேலழகர் உரை
விளக்கம்:
('மதி மருள' என்பது, 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலைகலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என்மதி நிலைகலங்க , மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும் பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும்,
(என்றவாறு). மதி - மானம்.
1230

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்

This darkening eve, my darkling soul must perish utterly;
Remembering him who seeks for wealth, but seeks not me.

(பிரிவுத்துன்பத்தால்‌) மாயாமல்‌ நின்ற என்‌ உயிர்‌, பொருள்‌ காரணமாகப்‌ பிரிந்துசென்ற காதலரை நினைத்து மயங்குகின்ற இம்‌ மாலைப்பொழுதில்‌ மாய்கின்றது.

My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.

பரிமேலழகர் உரை இதுவும் அது. மாயா என் உயிர் - காதலர் பிரிவைப் பொறுத்த இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருண்மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது.
விளக்கம்:
('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார்; காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து. மயங்கின மாலைப்பொழுதிலே, எனது சாகமாட்டாத உயிர் மெலியா நின்றது. இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனெ ன்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.


transliteration

maalaiyo allai manandhthaar uyirunnum
vaelainee vaali poluthu

punkannai vaali marulmaalai yemkaelpol
vankanna thonin thunai

paniarumpip paithalkol maalai thuniarumpith
thunpam valara varum

kaathalar ilvali maalai kolaikkalaththu
yaethilar pola varum

kaalaikkuch seithananru yenkol yevankolyaan
maalaikkuch seitha pakai

maalainoi seithal manandhthaar akalaatha
kaalai arindhtha thilaen

kaalai arumpip pakalaellaam pothaaki
maalai malarumindh noi

alalpolum maalaikkuth thoothaaki aayan
kulalpolum kollum patai

pathimarundu paithal ulakkum mathimarundu
maalai padartharum polthu

porulmaalai yaalarai ulli marulmaalai
maayumyen maayaa uyir