குறள் 1224

பொழுதுகண்டிரங்கல்

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்

kaathalar ilvali maalai kolaikkalaththu
yaethilar pola varum


Shuddhananda Bharati

Eventide sigh

Lover away, comes eventide
Like slayer to field of homicide.


GU Pope

Lamentations at Eventide

When absent is my love, the evening hour descends,
As when an alien host to field of battle wends.

In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.


Mu. Varadarajan

காதலர்‌ இல்லாத இப்போது, கொலை செய்யும்‌ இடத்தில்‌ பகைவர்‌ வருவதுபோல்‌ மாலைப்பொழுது(என்‌ உயிரைக்‌ கொள்ள, வருகின்றது.


Parimelalagar

இதுவும் அது. மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது.
விளக்கம்:
(ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனியான் ஆற்றுமாறு என்னை?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) காதலரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக்களத்துப் பகைவரைப்போல் வரும்,
(என்றவாறு) இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக் குத் தலைமகள் காரணங்கூறியது.