குறள் 1225

பொழுதுகண்டிரங்கல்

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை

kaalaikkuch seithananru yenkol yevankolyaan
maalaikkuch seitha pakai


Shuddhananda Bharati

Eventide sigh

What good have I done to morning
And what evil to this evening?


GU Pope

Lamentations at Eventide

O morn, how have I won thy grace? thou bring'st relief
O eve, why art thou foe! thou dost renew my grief.

What good have I done to morning (and) what evil to evening?


Mu. Varadarajan

யான்‌ காலைப்பொழுதிற்குச்‌ செய்த நன்மை என்ன? (என்னைத்‌ துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச்‌ செய்த பகையான தீமை என்ன.


Parimelalagar

இதுவும் அது. காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள், யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது? மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது?
விளக்கம்:
(கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்?' என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) காதலர் பிரிவதன் முன்னம் பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ? அவரோடு இன்ப நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?
(என்றவாறு). இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.