குறள் 1230

பொழுதுகண்டிரங்கல்

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்

porulmaalai yaalarai ulli marulmaalai
maayumyen maayaa uyir


Shuddhananda Bharati

Eventide sigh

Thinking of him whose quest is wealth
My life outlives the twilight stealth.


GU Pope

Lamentations at Eventide

This darkening eve, my darkling soul must perish utterly;
Remembering him who seeks for wealth, but seeks not me.

My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.


Mu. Varadarajan

(பிரிவுத்துன்பத்தால்‌) மாயாமல்‌ நின்ற என்‌ உயிர்‌, பொருள்‌ காரணமாகப்‌ பிரிந்துசென்ற காதலரை நினைத்து மயங்குகின்ற இம்‌ மாலைப்பொழுதில்‌ மாய்கின்றது.


Parimelalagar

இதுவும் அது. மாயா என் உயிர் - காதலர் பிரிவைப் பொறுத்த இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருண்மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது.
விளக்கம்:
('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார்; காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து. மயங்கின மாலைப்பொழுதிலே, எனது சாகமாட்டாத உயிர் மெலியா நின்றது. இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனெ ன்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.