குறள் 1228

பொழுதுகண்டிரங்கல்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை

alalpolum maalaikkuth thoothaaki aayan
kulalpolum kollum patai


Shuddhananda Bharati

Eventide sigh

A deadly arm, this shepherd's flute
Hails flaming eve and slays my heart.


GU Pope

Lamentations at Eventide

The shepherd's pipe is like a murderous weapon, to my ear,
For it proclaims the hour of ev'ning's fiery anguish near.

The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays


Mu. Varadarajan

ஆயனுடைய புல்லாங்குழல்‌, நெருப்புப்போல்‌ வருந்தும்‌ மாலைப்‌ பொழுதிற்குத்‌ தூதாகி என்னைக்‌ கொல்லும்‌ படையாக வருகின்றது.


Parimelalagar

இதுவும் அது. ஆயன் குழல் - முன்னெல்லாம் இனிதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும் படை - அது வந்து என்னைக் கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று.
விளக்கம்:
(பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங் குழலோ ?
(என்றவாறு). இப்பொழுது வருத்துதலின், படை என்றாள்.