குறள் 1234

உறுப்புநலனழிதல்

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்

panaineengkip paindhthoti chorum thunaineengkith
tholkavin vaatiya thol


Shuddhananda Bharati

Limbs languish

Bracelets slip off the arms that have
Lost old beauty for He took leave.


GU Pope

Wasting Away

When lover went, then faded all their wonted charms,
And armlets' golden round slips off from these poor wasted arms.

In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.


Mu. Varadarajan

துணைவர்‌ விட்டு நீங்கியதால்‌ பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள்‌, பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும்‌ கழலச்‌ செய்கின்றன.


Parimelalagar

இதுவும் அது. துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றி, பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும். இன்று அதற்குமேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன; இவை இங்ஙனம் செயற்பாலவல்ல.
விளக்கம்:
(பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால் செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனி அவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது,
(என்றவாறு). பசுத்த வளை - மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலே யன்றி மெலி வதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.