குறள் 1235

உறுப்புநலனழிதல்

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்

kotiyaar kodumai uraikkum thotiyodu
tholkavin vaatiya thol


Shuddhananda Bharati

Limbs languish

Bereft of bracelets and old beauty
Arms tell the cruel's cruelty.


GU Pope

Wasting Away

These wasted arms, the bracelet with their wonted beauty gone,
The cruelty declare of that most cruel one.

The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty ofthe pitiless one.


Mu. Varadarajan

வளையல்களும்‌ கழன்று பழைய அழகும்‌ கெட்டு வாடிய தோள்கள்‌,(என்‌ துன்பம்‌ உணராத) கொடியவரின்‌ கொடுமையைப்‌ பிறர்‌ அறியச்‌ சொல்கின்றன.


Parimelalagar

இதுவும் அது. கொடியார் கொடுமை உரைக்கும் - கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியொடு தொல் கவின் வாடிய தோள் - வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை?
விளக்கம்:
('உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன, வளையோடே கூடப் பழைய வாகிய அழகினை யிழந்த தோள்களும்,
(என்றவாறு). இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை யியற்பழித்துத் தோழி கூறியது.