குறள் 1232

உறுப்புநலனழிதல்

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்

nayandhthavar nalkaamai solluva polum
pachandhthu panivaarum kan


Shuddhananda Bharati

Limbs languish

My pale tearful eyes betray
The hardness of my husband, away.


GU Pope

Wasting Away

The eye, with sorrow wan, all wet with dew of tears,
As witness of the lover's lack of love appears.

The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.


Mu. Varadarajan

பசலைநிறம்‌ அடைந்து நீர்‌ சொரியும்‌ கண்கள்‌, நாம்‌ விரும்பிய காதலர்‌ நமக்கு அன்பு செய்யாத தன்மையைப்‌ (பிறர்க்குச்‌, சொல்வனபோல்‌ உள்ளன.


Parimelalagar

இதுவும் அது. பசந்து பணி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நம்மால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவது போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும்.
விளக்கம்:
(சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவன போ லாகாநின்றன ; பசப்புற்று நீர் சொரிகின்ற கண்கள்,
(என்றவாறு). இது தலை மகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகாநின்ற தென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.