குறள் 1238

உறுப்புநலனழிதல்

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்

muyangkiya kaikalai ookkap pachandhthathu
paindhthotip paethai nuthal


Shuddhananda Bharati

Limbs languish

The front of this fair one O paled
As my clasping arms loosed their hold.


GU Pope

Wasting Away

One day the fervent pressure of embracing arms I checked,
Grew wan the forehead of the maid with golden armlet decked.

When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.


Mu. Varadarajan

தழுவிய கைகளைத்‌ தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின்‌ நெற்றி, (அவ்வளவு சிறிதாகிய பிரிவையும்‌ பொறுக்காமல்‌) பசலை நிறம்‌ அடைந்தது.


Parimelalagar

வினைமுடித்து மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது. முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒரு ஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது; அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ?
விளக்கம்:
('இனிக் கடிதிற் சொல்லவேண்டும்' என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) யான் பிரிவதாக நினைத்து, அவள் முயங்கியகைகளை நீக்கினே னாக; அதனை யறிந்து, பசுத்த தொடியினையுடைய பேதை நுதல் பசந்தது, (). 9