Mutual Desire 127

1261

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்

My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,
With nothing on the wall the days since I was left forlorn.

என்‌ கண்களும்‌ அவர்‌ வரும்‌ வழியைப்‌ பார்த்துப்‌ பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும்‌ அவர்‌ சென்ற நாட்களைக்‌ குறித்துத்‌ தொட்டுத்‌ தொட்டுத்‌ தேய்ந்தன.

My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.

பரிமேலழகர் உரை போய நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஔ¢யிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை.
விளக்கம்:
(நாள்-ஆகு பெயர். 'புல்லியவாதல்' நுண்ணிய காணமாட்டாமை. 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. 'இனி யான் காணுமாறு என்னை?' என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.)
மணக்குடவர் உரை அவர்வயின்விதும்பலாவது அவர் வரவின்கண்ணே விரைதல்; காதலர் வரவு கேட்டிருத்தலென்றவாறு. இவையெல்லாம் தோழிக்குக் கூறினவாகக் கொள்ளப்படும். நிறையழிந்தார் அப்பொழுது காதலர் வரவிற்கு ஆசையுற்றிருப் பாராதலான், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல் லென்றன ; விரல்களும் அவர்போன நாட்களை யெண்ணி முடக்கு தலாய்த் தேய்ந்த ன,
(என்றவாறு) இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது
1262

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து

O thou with gleaming jewels decked, could I forget for this one day,
Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.

தோழி! காதலரின்‌ பிரிவால்‌ துன்புற்று வருந்துகின்ற இன்றும்‌ அவரை மறந்துவிட்டால்‌, அழகு கெட்டு என்தோள்‌ மேல்‌ அணிந்துள்ள அணிகள்‌ கழலுமாறு நேரும்‌.

O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.

பரிமேலழகர் உரை 'ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலையல்லை, சிறிது மறக்கல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம்.
விளக்கம்:
('இலங்கிழாய்' என்பது இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் - மறுப்பிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது, 'நீத்து' எனத் திரிந்த நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 'இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி அன்புறலாம்; அதனான் மறக்கற்பாலேன் அல்லேன்,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப் பேனாயின், பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும்,
(என்றவாறு)
1263

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்

On victory intent, His mind sole company he went;
And I yet life sustain! And long to see his face again!

வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக்கொண்டு வெளிநாட்டுக்குச்‌ சென்ற காதலர்‌; திரும்பி வருதலைக்‌ காண விரும்பியே இன்னும்‌ யான்‌ உயிரோடிருக்கின்றேன்‌.

To still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.

பரிமேலழகர் உரை இதுவும் அது. உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம் ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ் வெல்லையினும் உளேனாயினேன்.
விளக்கம்:
('உரன்' என்பது ஆகுபெயர். 'அந் நசையான் உயிர் வாழா நின்றேன்; அஃதில்லையாயின் இறந்துபடுவல்,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளே னானேன்,
(என்றவாறு)
1264

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு

‘He comes again, who left my side, and I shall taste love’s joy,’-
My heart with rapture swells, when thoughts like these my mind employ.

முன்பு கூடியிருந்த காதலைக்‌ கைவிட்டுப்‌ பிரிந்த அவருடைய வருகையை நினைத்து என்‌ நெஞ்சம்‌ மரத்தின்‌ கிளைகளின்மேலும்‌ ஏறிப்‌ பார்க்கின்றது.

My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.

பரிமேலழகர் உரை இதுவும் அது. பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி - நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கோடு ஏறும் - என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத்தெழாநின்றது.
விளக்கம்:
(வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும்,? அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள். 'ஓடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. 'கொண்டு' என்பது குறைந்து நிற்து. 'அஃதுள்ளிற்றலேனாயின் இறந்து படுவல்,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப் பிரிந்தவர் வருவாராக நினைந்தே, என்னெஞ்சம் மரத்தின் மேலேறிப் பாராநின்றது,
(என்றவாறு). உயர்ந்த மரத்தின் மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்.
1265

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு

O let me see my spouse again and sate these longing eyes!
That instant from my wasted frame all pallor flies.

என்‌ காதலனைக்‌ கண்ணாரக்‌ காண்பேனாக; கண்டபிறகு, என்னுடைய மெல்லிய தோளில்‌ உண்டாகிய பசலைநிறம்‌ தானே நீங்கி விடும்‌.

May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.

பரிமேலழகர் உரை தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை,' என்ற தோழிக்குச் சொல்லியது. கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின் கண்பசப்புத் தானே நீங்கும்.
விளக்கம்:
('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அது வேண்டும் எனப்துபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என் கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளினுண்டான பசலை நீங்கும்,
(என்றவாறு). இது காண்டல் வேட்கையால் கூறியது.
1266

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட

O let my spouse but come again to me one day!
I’ll drink that nectar: wasting grief shall flee away.

என்‌ காதலன்‌ ஒருநாள்‌ என்னிடம்‌ வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய்‌ எல்லாம்‌ தீருமாறு நான்‌ நன்றாக நுகர்வேன்‌.

May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.

பரிமேலழகர் உரை இதுவும் அது. கொண்கண் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன்.
விளக்கம்:
('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்; வந்தானாகில், என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன்,
(என்றவாறு). இது வரவு வேட்கையாற் கூறியது.
1267

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்

Shall I draw back, or yield myself, or shall both mingled be,
When he returns, my spouse, dear as these eyes to me.

என்னுடைய கண்போன்ற காதலர்‌ வருவாரானால்‌, யான்‌ அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத்‌ தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?

On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?

பரிமேலழகர் உரை இதுவும் அது. கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின்; புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ? புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ? கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்?
விளக்கம்:
(புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ? என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கண்போற் சிறந்த கேளிர் வருவாராயின், அவர் வரவு நீட்டித் தமை நோக்கி யான் புலக்கக் கடவேனோ; அன்றி என்னாற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ; யாது செய்யக் கடவேன்?
(என்றவாறு).
1268

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து

O would my king would fight, o’ercome, devide the spoil;
At home, to-night, the banquet spread should crown the toil.

அரசன்‌ இச்‌ செயலில்‌ முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின்‌ யாம்‌ மனைவியோடு கூடியிருந்து அன்றுவரும்‌ மாலைப்பொழுதிற்கு விருந்து செய்வோம்‌.

Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.

பரிமேலழகர் உரை வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித் துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது. வேந்தன் வினை கலந்து வென்று ஈக - வேந்தன் வினை செய்தலைப் புரிந்து வெல்வானாக; மனை கலந்து மாலை விருந்து அயர்கம் - யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக.
விளக்கம்:
('மனை' என்பது ஈண்டு ஆகுபெயர். "மங்கலம் என்ப மனை மாட்சி" (குறள் 60) என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப் பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனை கலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப் பொழுதின்கண் விருந்தயர்க என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக; யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம் காதலர்க்கு விருந்து செய்வே மாக,
(என்றவாறு). வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள். மனை - அட்டில்.
1269

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு

One day will seem like seven to those who watch and yearn
For that glad day when wanderers from afar return.

தொலைவில்‌ உள்ள வெளிநாட்டிற்குச்‌ சென்ற காதலர்‌ திரும்பிவரும்‌ நாளை நினைத்து ஏங்கும்‌ மகளிர்க்கு ஒருநாள்‌ ஏழுநாள்‌ போல(நெடிதாகக்‌) கழியும்‌.

To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.

பரிமேலழகர் உரை பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் 'இது ஒன்று உடைத்து!' என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது. கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; எல்லா கை இகழ்ந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கைகடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின் உண்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இரா நின்றது; இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக.
விளக்கம்:
(காத்தல் - நாணால் அடக்குதல். தன்கண் பிரிதற்குறிப்புளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நெடு நெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுது தானே எழுநாளைப்போலச் செல்கின்றது,
(என்றவாறு). 5
1270

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்

What’s my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth?

துன்பத்தைத்‌ தாங்காமல்‌ மனம்‌ உடைந்து அழிந்து விட்டால்‌, நம்மைத்‌ திரும்பப்‌ பெறுவதனால்‌ என்ன? பெற்று விட்டால்‌ என்ன? பெற்றுப்‌ பொருந்தினாலும்‌ என்ன?

After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?

பரிமேலழகர் உரை இதுவும் அது. உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப் பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் - அது அன்றியே பெற்றால் என்? உறின் என்? - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை. (இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன.
விளக்கம்:
(அதன் மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எனது உள்ளம் உடைந்து போயின், பின்பு அவரைப் பெறுவே மென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம் ? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?
(என்றவாறு). இது வருவா ரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.


transliteration

vaalatrrup putrkenra kannum avarsenra
naalotrrith thaeindhtha viral

ilangkilaai inru marappinyen tholmael
kalangkaliyum kaarikai neeththu

urannasaii ullam thunaiyaakach senraar
varalnasaii innum ulaen

kootiya kaamam pirindhthaar varavullik
koaduko taerumaen naenjsu

kaankaman konkanaik kannaarak kandapin
neengkumyen maenthol pachappu

varukaman konkan orunaal parukuvan
paithalnoi yellaam keda

pulappaenkol pulluvaen kollo kalappaenkol
kananna kaelir viran

vinaikalandhthu vaenreeka vaendhthan manaikalandhthu
maalai ayarkam virundhthu

orunaal yelunaalpol sellumsaen senraar
varunaalvaiththu yaengku pavarkku

paerinyennaam paetrrakkaal yennaam urinaennaam
ullam utaindhthukkak kaal