குறள் 1267

அவர்வயின்விதும்பல்

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்

pulappaenkol pulluvaen kollo kalappaenkol
kananna kaelir viran


Shuddhananda Bharati

Mutual yearning

If my eye-like lord returneth
Shall I sulk or clasp or do both?


GU Pope

Mutual Desire

Shall I draw back, or yield myself, or shall both mingled be,
When he returns, my spouse, dear as these eyes to me.

On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?


Mu. Varadarajan

என்னுடைய கண்போன்ற காதலர்‌ வருவாரானால்‌, யான்‌ அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத்‌ தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?


Parimelalagar

இதுவும் அது. கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின்; புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ? புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ? கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்?
விளக்கம்:
(புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ? என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) கண்போற் சிறந்த கேளிர் வருவாராயின், அவர் வரவு நீட்டித் தமை நோக்கி யான் புலக்கக் கடவேனோ; அன்றி என்னாற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ; யாது செய்யக் கடவேன்?
(என்றவாறு).