குறள் 1270

அவர்வயின்விதும்பல்

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்

paerinyennaam paetrrakkaal yennaam urinaennaam
ullam utaindhthukkak kaal


Shuddhananda Bharati

Mutual yearning

When her heart is broken, what is
The good of meeting and love-embrace?


GU Pope

Mutual Desire

What's my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth?

After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?


Mu. Varadarajan

துன்பத்தைத்‌ தாங்காமல்‌ மனம்‌ உடைந்து அழிந்து விட்டால்‌, நம்மைத்‌ திரும்பப்‌ பெறுவதனால்‌ என்ன? பெற்று விட்டால்‌ என்ன? பெற்றுப்‌ பொருந்தினாலும்‌ என்ன?


Parimelalagar

இதுவும் அது. உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் - நம்மைப் பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் - அது அன்றியே பெற்றால் என்? உறின் என்? - அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை. (இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன.
விளக்கம்:
(அதன் மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) எனது உள்ளம் உடைந்து போயின், பின்பு அவரைப் பெறுவே மென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம் ? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?
(என்றவாறு). இது வருவா ரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.