குறள் 1271

குறிப்பறிவுறுத்தல்

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு

karappinung kaiyikandh thollaanin unkan
uraikkal uruvathon rundu


Shuddhananda Bharati

Feeling surmised

You hide; but your painted eyes
Restraint off, report your surmise.


GU Pope

The Reading of the Signs

Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint.

Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.


Mu. Varadarajan

நீ சொல்லாமல்‌ மறைத்தாலும்‌ நிற்காமல்‌ உன்னைக்‌ கடந்து உன்னுடைய கண்கள்‌ எனக்குச்‌ சொல்லக்கூடிய செய்தி ஒன்று இருக்கின்றது.


Parimelalagar

பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் 'இது ஒன்று உடைத்து!' என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது. கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; எல்லா கை இகழ்ந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கைகடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின் உண்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இரா நின்றது; இனி அதனை நீயே தௌ¢யச் சொல்வாயாக.
விளக்கம்:
(காத்தல் - நாணால் அடக்குதல். தன்கண் பிரிதற்குறிப்புளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.)


Manakkudavar

குறிப்பறிவுறுத்தலாவது குறிப்பினை யறிவுறுத்தல். (இதன் பொருள்) நீ சொல்லாது மறைத்தாயாயினும், அதற்குடம்படாதே நின் னைக் கை கடந்து நின்னுண்களே எனக்குச் சொல்ல லுறுவதொரு காரியமுண்டா பிராநின்றது ; இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக,
(என்றவாறு).