The Reading of the Signs 128

1271

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு

Thou hid’st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint.

நீ சொல்லாமல்‌ மறைத்தாலும்‌ நிற்காமல்‌ உன்னைக்‌ கடந்து உன்னுடைய கண்கள்‌ எனக்குச்‌ சொல்லக்கூடிய செய்தி ஒன்று இருக்கின்றது.

Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.

பரிமேலழகர் உரை பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் 'இது ஒன்று உடைத்து!' என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது. கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; எல்லா கை இகழ்ந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கைகடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின் உண்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இரா நின்றது; இனி அதனை நீயே தௌ¢யச் சொல்வாயாக.
விளக்கம்:
(காத்தல் - நாணால் அடக்குதல். தன்கண் பிரிதற்குறிப்புளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.)
மணக்குடவர் உரை குறிப்பறிவுறுத்தலாவது குறிப்பினை யறிவுறுத்தல். (இதன் பொருள்) நீ சொல்லாது மறைத்தாயாயினும், அதற்குடம்படாதே நின் னைக் கை கடந்து நின்னுண்களே எனக்குச் சொல்ல லுறுவதொரு காரியமுண்டா பிராநின்றது ; இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக,
(என்றவாறு).
1272

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது

The simple one whose beauty fills mine eye, whose shoulders curve
Like bambu stem, hath all a woman’s modest sweet reserve.

கண்நிறைந்த அழகும்‌ மூங்கில்போன்ற தோளும்‌ உடைய என்‌ காதலிக்குப்‌ பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும்‌ இயல்பு மிகுதியாக உள்ளது.

Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.

பரிமேலழகர் உரை நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது. கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு. என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது.
விளக்கம்:
(இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளி னையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது,
(என்றவாறு).
1273

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு

As through the crystal beads is seen the thread on which they ‘re strung
So in her beauty gleams some thought cannot find a tongue.

(கோத்த) மணியினுள்‌ விளங்கும்‌ நூலைப்போல்‌ என்‌ காதலியின்‌ அழகினுள்‌ விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.

பரிமேலழகர் உரை இதுவும் அது. மணியில் திகழ்தரும் நூல்போல். கோக்கப்பட்ட பளிங்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு.
விளக்கம்:
(அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான் அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்,' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கோவைப்பட்ட நீலமணியின் கண்ணே தோற்றுகின்ற நூல் போல், இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உண்டு, (எ - று ). அழகு - புணர்ச்சியால் வந்த அழகு போலுமென்னும் குறிப்பு.
1274

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு

As fragrance in the opening bud, some secret lies
Concealed in budding smile of this dear damsel’s eyes.

அரும்பு தோன்றும்போதும்‌ அடங்கியிருக்கும்‌ மணத்தைப்‌ போல்‌, காதலியின்‌ புன்முறுவலின்‌ தோற்றத்தில்‌ அடங்கி இருக்கும்‌ குறிப்பு ஒன்று உள்ளது.

There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in anunblossomed bud.

பரிமேலழகர் உரை இதுவும் அது. முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு.
விளக்கம்:
(முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம் போல், பேதை யுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு,
(என்றவாறு). இஃது இறந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகை செய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன் னெஞ்சிற்குச் சொல்லியது.
1275

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து

The secret wiles of her with thronging armlets decked,
Are medicines by which my raising grief is checked.

காதலி என்னை நோக்கிச்‌ செய்துவிட்டுச்‌ சென்ற கள்ளமான குறிப்பு. என்‌ மிக்க துயரத்தைத்‌ தீர்க்கும்‌ மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.

பரிமேலழகர் உரை இதுவும் அது. செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாத தொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து . என் மிக்க துயரைத் தீர்க்கும். மருந்தாவதொன்றனை உடைத்து.
விளக்கம்:
(உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிப்புத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து: அப்பிரிவின்மை தோழியால் தௌ¢வித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்றகளவு, நீ யுற்ற தொரு துன்பத்தைத் தீர்ப்பதொருமருந்தாதலை உடைத்து,
(என்றவாறு). தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியும் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச் செல்லென்று தோழி கூறியது.
1276

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து

While lovingly embracing me, his heart is only grieved:
It makes me think that I again shall live of love bereaved.

பெரிதும்‌ அன்பு செய்து விரும்புமாறு கூடுதல்‌, அரிதாகிய பிரிவைச்‌ செய்து பிறகு அன்பில்லாமல்‌ கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்‌.

The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.

பரிமேலழகர் உரை தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தௌ¢விக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது. பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து.
விளக்கம்:
(பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஊடினகாலத்து அதன் அளவன்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்பு போலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றி யிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு புரிவுடைத்து,
(என்றவாறு). இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லி யது.
1277

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை

My severance from the lord of this cool shore,
My very armlets told me long before.

குளிர்ந்த துறையை உடைய காதலன்‌ பிரிந்த பிரிவை நம்மைவிட முன்னமே நம்முடைய வளையல்கள்‌ உணர்ந்து கழன்று விட்டனவே!

My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.

பரிமேலழகர் உரை இதுவும் அது. தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற்பிரிந்தமையை; நம்மினும் வளைமுன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளகைள் முன்னே அறிந்தன.
விளக்கம்:
(கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தௌ¢ய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அது தன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை, நாமறி வதற்கும் முன்னே வளைகள் அறிந்தன,
(என்றவாறு).
1278

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து

My loved one left me, was it yesterday?
Days seven my pallid body wastes away!

எம்முடைய காதலர்‌ நேற்றுத்தான்‌ பிரிந்து சென்றார்‌; யாமும்‌ மேனி பசலை நிறம்‌ அடைந்து ஏழு நாட்கள்‌ ஆய்விட்ட நிலையில்‌ இருக்கின்றோம்‌.

It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.

பரிமேலழகர் உரை இதுவும் அது. எம் காதலர் சென்றார் நெருநற்று - எம் காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனிபசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம்.
விளக்கம்:
('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழு நாளுண்டாகலின், அன்றே மேனி பசந்தது என்பாள், 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார்; யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்,
(என்றவாறு). இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி, இன்புற்றில் மென்று தலைமகள் கூறியது.
1279

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது

She viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did.

தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும்‌ நோக்கித்‌ தன்னுடைய அடிகளையும்‌ நோக்கி அவள்‌ செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்‌.

She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there(significantly).

பரிமேலழகர் உரை தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது. யான் அது தௌ¢வித்தவழித் தௌ¢யாது தொடி நோக்கி - 'அவா பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா' எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி' - 'அதற்கு ஏதுவாக இவை மெலியும்' எனத் தன் மென்தோள்களையும்? நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்த காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது. அங்ஙனம் அவள் செய்து குறிப்பு உடன் போக்காயிருந்தது.
விளக்கம்:
(செய்த குறிப்பு - செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், "செறிதொடி செய்திறந்த கள்ளம்" (குறள் 1275 என்றனாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடி யையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு, அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.
1280

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு

To show by eye the pain of love, and for relief to pray,
Is womanhood’s most womanly device, men say.

கண்ணினால்‌ காமநோயைத்‌ தெரிவித்துப்‌ பிரியாம லிருக்குமாறு இரத்தல்‌, பெண்தன்மைக்கு மேலும்‌ பெண்‌ தன்மை உடையது என்று கூறுவர்‌.

To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.

பரிமேலழகர் உரை தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது. காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர்தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற் சொல்லாது கண்ணிற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர்.
விளக்கம்:
(தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தௌ¢ந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர்,
(என்றவாறு). இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.


transliteration

karappinung kaiyikandh thollaanin unkan
uraikkal uruvathon rundu

kanniraindhtha kaarikaik kaampaerthot paethaikkup
paenniraindhtha neermai paerithu

maniyil thikaltharu noolpol madandhthai
aniyil thikalvathonru undu

mukaimokkul ullathu naatrrampol paethai
nakaimokkul ullathon rundu

serithoti seithirandhtha kallam uruthuyar
theerkkum marundhthonru utaiththu

paerithaatrrip paetpak kalaththal arithaatrri
anpinmai koolva thutaiththu

thannandh thuraivan thanandhthamai namminum
munnam unarndhtha valai

naerunatrruch senraaryem kaathalar yaamum
yelunaalaem maeni pachandhthu

thotinokki maentholum nokki atinokki
akhthaan davalsei thathu

paenninaal paenmai utaiththaenpa kanninaal
kaamanoi solli iravu