குறள் 1262

அவர்வயின்விதும்பல்

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து

ilangkilaai inru marappinyen tholmael
kalangkaliyum kaarikai neeththu


Shuddhananda Bharati

Mutual yearning

Beauty pales and my bracelets slide;
Why not forget him now, bright maid?


GU Pope

Mutual Desire

O thou with gleaming jewels decked, could I forget for this one day,
Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.

O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.


Mu. Varadarajan

தோழி! காதலரின்‌ பிரிவால்‌ துன்புற்று வருந்துகின்ற இன்றும்‌ அவரை மறந்துவிட்டால்‌, அழகு கெட்டு என்தோள்‌ மேல்‌ அணிந்துள்ள அணிகள்‌ கழலுமாறு நேரும்‌.


Parimelalagar

'ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலையல்லை, சிறிது மறக்கல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம்.
விளக்கம்:
('இலங்கிழாய்' என்பது இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் - மறுப்பிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது, 'நீத்து' எனத் திரிந்த நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 'இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி அன்புறலாம்; அதனான் மறக்கற்பாலேன் அல்லேன்,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப் பேனாயின், பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும்,
(என்றவாறு)