குறள் 1264

அவர்வயின்விதும்பல்

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு

kootiya kaamam pirindhthaar varavullik
koaduko taerumaen naenjsu


Shuddhananda Bharati

Mutual yearning

My heart in rapture heaves to see
His retun with love to embrace me.


GU Pope

Mutual Desire

'He comes again, who left my side, and I shall taste love's joy,'-
My heart with rapture swells, when thoughts like these my mind employ.

My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.


Mu. Varadarajan

முன்பு கூடியிருந்த காதலைக்‌ கைவிட்டுப்‌ பிரிந்த அவருடைய வருகையை நினைத்து என்‌ நெஞ்சம்‌ மரத்தின்‌ கிளைகளின்மேலும்‌ ஏறிப்‌ பார்க்கின்றது.


Parimelalagar

இதுவும் அது. பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி - நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கோடு ஏறும் - என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத்தெழாநின்றது.
விளக்கம்:
(வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும்,? அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள். 'ஓடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. 'கொண்டு' என்பது குறைந்து நிற்து. 'அஃதுள்ளிற்றலேனாயின் இறந்து படுவல்,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப் பிரிந்தவர் வருவாராக நினைந்தே, என்னெஞ்சம் மரத்தின் மேலேறிப் பாராநின்றது,
(என்றவாறு). உயர்ந்த மரத்தின் மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்.