குறள் 1252

நிறையழிதல்

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

kaamam yenavonno kanninraen naenjchaththai
yaamaththum aalum tholil


Shuddhananda Bharati

Reserve lost

The thing called lust is a heartless power
It sways my mind at midnight hour.


GU Pope

Reserve Overcome

What men call love is the one thing of merciless power;
It gives my soul no rest, e'en in the midnight hour.

Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.


Mu. Varadarajan

காமம்‌ என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம்‌ இல்லாதது; அஃது என்‌ நெஞ்சத்தை நள்ளிரவிலும்‌ ஏவல்‌ கொண்டு ஆள்கின்றது.


Parimelalagar

நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும்' என்றாட்குச் சொல்லியது. யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடையாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது.
விளக்கம்:
('ஓ' என்பது இரக்கக் கூறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் ?- தலைமகன்பாற் செலவிடுத்தல் தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும், அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று ; என்னெஞ் சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில் கொள்ளாநின்றது,
(என்றவாறு). தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர் மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.