The Solitary Anguish 120

1191

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி

The bliss to be beloved by those they love who gains,
Of love the stoneless, luscious fruit obtains.

தாம்‌ விரும்பும்‌ காதலர்‌ தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர்‌, காதல்‌ வாழ்க்கையின்‌ பயனாகிய விதை இல்லாத பழத்தைப்‌ பெற்றவரே ஆவர்‌.

The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?

பரிமேலழகர் உரை 'காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர்; நீ அவரோடு பேரின்பம் நுகர்தி,' என்ற தோழிக்குச் சொல்லியது. தாம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர்; பெற்றோரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காமநுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை.
விளக்கம்:
(காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது, முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனியாம் பெற்றிலேன்,' என்பதாயிற்று.)
மணக்குடவர் உரை தனிப்படர்மிகுதியாவது தனிமையால் வந்த துன்ப மிகுதி கூறுதல். யாம் பசப்பால் வருந்துகின்றமைபோல் அவரும் வருந்துவாரென்றும் புணர்ச்சியிடைய றாமல் இனிது நடக்குமென்றும் நினைத்துத் தலைமகள் தனது துன்பத்தினைக் கூறுதலான், அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின் கண் பாலில்லாததோர் பழத்தைப் பெற்றாராவர்,
(என்றவாறு). இது தடையின்றி நுகரலாமென்றது.
1192

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி

As heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love.

தம்மை விரும்புகின்றவர்க்குக்‌ காதலர்‌ அளிக்கும்‌ அன்பு, உயிர்வாழ்கின்றவர்க்கு மேகம்‌ மழை பெய்து காப்பாற்றுதலைப்‌ போன்றது.

The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the properseason) on those who live by it.

பரிமேலழகர் உரை இதுவும் அது. வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி;வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும்.
விளக்கம்:
('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள் உயிர் வாழ்வார்க்கு மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது. இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.
1193

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு

Who love and are beloved to them alone
Belongs the boast, “We’ve made life’s very joys our own.’

காதலரால்‌ விரும்பப்படுகின்றவர்க்குப்‌ (பிரிவுத்‌ துன்பம்‌ இருந்தாலும்‌) ‘மீண்டும்‌ வந்தபின்‌ வாழ்வோம்‌ என்று இருக்கும்‌ செருக்குத்‌ தகும்‌.

The pride that says “we shall live” suits only those who are loved by their beloved (husbands).

பரிமேலழகர் உரை இதுவும் அது. வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு.
விளக்கம்:
(நாம் அவரான் விழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின்கண் இரு ந்து உயிர்வாழ்வோமென்னுங் களிப்பு அமையும்,
(என்றவாறு). இது தலைமகள் இருந்தாலும் பயனில்லை; அதிற்சாதல் அமையுமென்று வாழ்க் கையை முனிந்து தோழிக்குக் கூறியது.
1194

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்

Those well-beloved will luckless prove,
Unless beloved by those they love.

தாம்விரும்பும்‌ காதலரால்‌ விரும்பப்படாவிட்டால்‌ உலகத்தாரால்‌ விரும்பப்படும்‌ நிலையில்‌ உள்ளவரும்‌ நல்வினை பொருந்தியவர்‌ அல்லர்‌.

Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.

பரிமேலழகர் உரை 'காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி,' என்ற தோழிக்குச் சொல்லியது. வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.
விளக்கம்:
(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை; நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையேற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டா ரும் தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின், விருப்பமில்லா ராவர்,
(என்றவாறு). இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலை மகளுக்கு நீ இவ்வாறு கூறுவை பாயின், நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிக வாழ்வார் யாரென்றதோழிக்கு அவள் கூறியது. கொண்டான் கயிற் கண்டான் காயுமென்பது பழமொழி.
1195

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை

From him I love to me what gain can be,
Unless, as I love him, he loveth me?

நாம்‌ காதல்‌ கொண்ட காதலர்‌ தாமும்‌ அவ்வாறே நம்மிடம்‌ காதல்‌ கொள்ளளாதபோது, நமக்கு அவர்‌ என்ன நன்மை செய்வார்‌?

He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?

பரிமேலழகர் உரை 'அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்,' என்ற தோழிக்குச் சொல்லியது. நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி.
விளக்கம்:
(எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்; தாம் காதலியாத விடத்து ,
(என்றவாறு).
1196

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது

Love on one side is bad; like balanced load
By porter borne, love on both sides is good.

காதல்‌ ஒரு பக்கமாக இருத்தல்‌ துன்பமானது; காவடியின்‌ பாரம்போல்‌ இருபக்கமாகவும்‌ ஒத்திருப்பது இன்பமானதாகும்‌.

Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.

பரிமேலழகர் உரை இதுவும் அது. காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக் கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.
விளக்கம்:
(மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா - ஆகுபெயர். என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும் உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது ; காவினது பாரம்போல, இரண்டு தலையும் ஒத்த அன்பினாலுண்டாகிய காமமே இனிதா வது,
(என்றவாறு). இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும், தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூட்டினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறி
1197

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்

While Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown?

(காதலர்‌ இருவரிடத்திலும்‌ ஒத்திருக்காமல்‌) ஒருவரிடத்தில்‌ மட்டும்‌ காமன்‌ நின்று இயங்குவதால்‌, என்னுடைய துன்பத்தையும்‌ வருத்தத்தையும்‌ அறியானோ?

Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?

பரிமேலழகர் உரை இதுவும் அது. ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான் கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ!
விளக்கம்:
('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான்; இனி யான் உய்யுமாற என்னை?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தான் ஒருவர் பக்கமாக நின்று ஒழுகித் துன்பஞ் செய்கின்ற காம தேவன், நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ ? காண் பானாயின், நம்மை வருத்தானே; தெய்வமாகலான்,
(என்றவாறு).
1198

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்

Who hear from lover’s lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they!

தான்‌ விரும்பும்‌ காதலரின்‌ இனிய சொல்லைப்‌ பெறாமல்‌ உலகத்தில்‌ பிரிவுத்‌ துன்பத்தைப்‌ பொறுத்து வருகின்ற வரைப்போல்‌ வன்கண்மை ௨யவர் இல்லை

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kindword from their beloved.

பரிமேலழகர் உரை தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது. வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம் காதலரிடத்து நின்று வரும் இனிய சொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப் போல், வன்கண்ரையுடையார் இவ்வுலகத்து இல்லை.
1199

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு

Though he my heart desires no grace accords to me,
Yet every accent of his voice is melody.

யான்‌ விரும்பிய காதலர்‌ மீண்டும்‌ வந்து அன்பு செய்ய மாட்டார்‌ என்றாலும்‌, அவரைப்பற்றிய புகழைக்‌ கேட்பதும்‌ என்‌ செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.

பரிமேலழகர் உரை இதுவும் அது. நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதல் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்துயாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம்.
விளக்கம்:
(இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்,' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும், அவர் பக்கத்தனவாகிய சொற்களும் எங்கள் செவிக்கு இனியவாம்,
(என்றவாறு).
1200

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு

Tell him thy pain that loves not thee?
Farewell, my soul, fill up the sea!

நெஞ்சமே! நீ வாழிய ! அன்பு இல்லாதவரிடம்‌ உன்‌ மிகுந்த துன்பத்தைச்‌ சொல்கின்றாய்‌! அதைவிட எளிதாகக்‌ கடலைத்‌ தூர்ப்பாயாக.

Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).

பரிமேலழகர் உரை தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது. உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாய; அஃது எளிது.
விளக்கம்:
(உரைக்கலுற்றது அளவிறந்த நோயகலானும், கேட்பார் உறவினராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நெஞ்சே! நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பய னில்லை யென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்; நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின், அஃது அதனினும் நன்று,
(என்றவாறு) இது தூதுவிடக்கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில்லை யென்று தலைமகள் கூறியது.


transliteration

thaamveelvaar thamveelap paetrravar paetrraarae
kaamaththuk kaalil kani

vaalvaarkku vaanam payandhthatrraal veelvaarkku
veelvaar alikkum ali

veelunar veelap paduvaarkku amaiyumae
vaalunam yennum serukku

veelap paduvaar keleeiyilar thaamveelvaar
veelap pataaar yenin

naamkaathal kontaar namakkevan seipavo
thaamkaathal kollaak katai

oruthalaiyaan innaathu kaamamkaap pola
iruthalai yaanum inithu

paruvaralum paithalum kaanaankol kaaman
oruvarkan ninroluku vaan

veelvaarin insol paeraaathu ulakaththu
vaalvaarin vankanaar il

nasaiiyaar nalkaar yeninum avarmaatdu
isaiyum iniya sevikku

uraaarkku urunoi uraippaai kadalaich
seraaaai vaaliya naenjsu