The Pallid Hue 119

1181

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற

I willed my lover absent should remain;
Of pining’s sickly hue to whom shall I complain?

விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்‌; பிரிந்தபின்‌ பசலை உற்ற என்‌ தன்மையை வேறு யார்க்குச்‌ சென்று சொல்வேன்‌?

I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of myhaving turned sallow.

பரிமேலழகர் உரை (முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான் பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்?
விளக்கம்:
('பிற என்பது அசைநிலை உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ?' என்றும் கூறினாள்.)
மணக்குடவர் உரை பசப்புறு தலாவது பசப்புறு தலால் வந்த வருத்தத்தைத் தோழிக்குத் தலை மகள் கூறுதல். காதலித்தார்க்குக் காதலிக்கப்படும்பொரு ளெய் தாக்கால் அவர் நிறம் வேறுபடுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மாற்றியாவர்க்குச் சொல்லுவேன்,
(என்றவாறு). இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது.
1182

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு

‘He gave’: this sickly hue thus proudly speaks,
Then climbs, and all my frame its chariot makes.

அந்தக்‌ காதலர்‌ உண்டாக்கினார்‌ என்னும்‌ பெருமிதத்தோடு இந்தப்‌ பசலைநிறம்‌ என்னுடைய மேனிமேல்‌ ஊர்ந்து பரவி வருகின்றது.

Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.

பரிமேலழகர் உரை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. யான் ஆற்றியுளேனாகவும்; பசப்பு இப் பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என்மேனிமேல் இவர் தந்து ஊரும் - என்மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது.
விளக்கம்:
(''குருதி கெப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல'' (சீவக விமலை. 1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல் அறிக. 'அஃது உரிமை பற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம் பின் மேலே பரந்து ஊரும்,
(என்றவாறு). இஃது இப்பசலையை நீக்க வேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பி னாலே வந்ததல்ல ; நீக்கவேண்டுவாயாயின், அவர்க்குச் சொல்லென்று கூறியது.
1183

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

Of comeliness and shame he me bereft,
While pain and sickly hue, in recompense, he left.

காமநோயையும்‌ பசலை நிறத்தையும்‌ எனக்குக்‌ கைம்மாறாகக்‌ கொடுத்துவிட்டு, என்‌ சாயலையும்‌ நாணத்தையும்‌ அவர்‌ என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார்‌.

He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.

பரிமேலழகர் உரை 'அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார்.
விளக்கம்:
(எதிர் நிரல் நிறை. 'அடக்குந் தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மேன்மையும் நாணமும் அவர் கொண்டுபோனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து,
(என்றவாறு). மேன்மை - பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மை யும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமையாற் கூறியது.
1184

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு

I meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray.

யான்‌ அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்‌; யான்‌ உரைப்பதும்‌ அவற்றையே; அவ்வாறிருந்தும்‌ பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

I think (of him); and what I speak about is but his excellence; stillis there sallowness; and this is deceitful.

பரிமேலழகர் உரை 'பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்,' என்றவழிச் சொல்லியது. யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது இது வஞ்சனையாயிருந்தது.
விளக்கம்:
(பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத்தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யான் எக்காலமும் நினைப்பேன்; சொல்லுவதும் அவர் திறமே; இத்தன்மையேனாகவும், பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது; இதற்கு நிலை யான் அறிகிலேன்,
(என்றவாறு). இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.
1185

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது

My lover there went forth to roam;
This pallor of my frame usurps his place at home.

அதோ பார்‌! எம்முடைய காதலர்‌ பிரிந்து செல்கின்றார்‌; இதோ பார்‌! என்னுடைய மேனியில்‌ பசலைநிறம்‌ வந்து படர்கின்றது.

Just as my lover departed then, did not sallowness spread here on my person ?

பரிமேலழகர் உரை 'காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை,' என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது. எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கேசெல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண்- என்மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ?
விளக்கம்:
('உவக்காண், இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள். தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய்,
(என்றவாறு). இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்க, பசலை பரவாநின்றது; அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது.
1186

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

As darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord’s embrace.

விளக்கினுடைய மறைவைப்‌ பார்த்துக்‌ காத்திருக்கின்ற இருளைப்போலவே, தலைவனுடைய தழுவுதலின்‌ சோர்வைப்‌ பசலை பார்த்துக்‌ காத்திருக்கின்றது.

Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband’s intercourse.

பரிமேலழகர் உரை இதுவும் அது. விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளேபோல; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு.
விளக்கம்:
('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது?' என்பாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போல், கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு,
(என்றவாறு). இஃது அவர் பிரிந்தது இப்பொழுது ; இப்ப சப்பு யாங்ஙன் வந்தது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
1187

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு

I lay in his embrace, I turned unwittingly;
Forthwith this hue, as you might grasp it, came on me.

தலைவனைத்‌ தழுவிக்‌ கிடந்தேன்‌; பக்கத்தே சிறிது அகன்றேன்‌; அவ்வளவிலேயே பசலை நிறம்‌ அள்ளிக்‌ கொள்வதுபோல்‌ வந்து பரவிவிட்டதே!

I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.

பரிமேலழகர் உரை இதுவும் அது. புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடை பெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது.
விளக்கம்:
('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ?' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடைபெயர்ந்தனன்; அவ்வளவிலே, அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை,
(என்றவாறு). இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக் குத் தலைமகள் கூறியது.
1188

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்

On me, because I pine, they cast a slur;
But no one says, ‘He first deserted her.’

‘இவள்‌ பிரிவால்‌ வருந்திப்‌ பளலைநிறம்‌ அடைந்தாள்‌ என்று பழி சொல்வதே அல்லாமல்‌, ‘இவளைக்‌ காதலர்‌ விட்டுப்‌ பிரிந்தார்‌ என்று சொல்பவர்‌ இல்லையே!

Besides those who say “she has turned sallow” there are none who say “he has forsaken her”.

பரிமேலழகர் உரை 'நீ இங்ஙனம் பசக்கற்பாலைபல்லை,' என்ற தோழியோடு புலந்து சொல்லியது. இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது;
விளக்கம்:
(இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. 'என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல்பற்றிப் புலக்கின்றமையின்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இாைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை,
(என்றவாறு). இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
1189

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்

Well! let my frame, as now, be sicklied o’er with pain,
If he who won mny heart’s consent, in good estate remain!

பிரிவுக்கு உடன்படச்‌ செய்த காதலர்‌ நல்ல நிலையுடையவர்‌ ஆவார்‌ என்றால்‌, என்னுடைய மேனி உள்ளபடி பசலைநிறம்‌ அடைவதாக .

If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turnsallow.

பரிமேலழகர் உரை இதுவும் அது. நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக.
விளக்கம்:
(நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்?' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக; நம்மைக் காதலித்த வரும் நம்மைப் போலத் துன்பமுறுவராயின்,
(என்றவாறு). இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.
1190

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்

‘Tis well, though men deride me for my sickly hue of pain;
If they from calling him unkind, who won my love, refrain.

பிரிவுக்கு உடன்படச்‌ செய்த காதலர்‌ பிரிந்து வருத்துதலைப்‌ பிறர்‌ தூற்றாமலிருப்பாரானால்‌, யான்‌ பசலையுற்றதாகப்‌ பெயரெடுத்தல்‌ நல்லதே.

It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).

பரிமேலழகர் உரை தரைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவறி அவள் இயற்பட மொழிந்தது. நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்: பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று.
விளக்கம்:
('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள். அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று; நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின்,
(என்றவாறு). இது நின்மேனி பசந்ததென்றதோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையே ன்று தலைமகள் கூறியது.


transliteration

nayandhthavarkku nalkaamai naerndhthaen pachandhthavaen
panpiyaarkku uraikkoa pira

avarthandhthaar yennum thakaiyaal ivarthandhthaen
maenimael oorum pachappu

saayalum naanum avarkontaar kaimmaaraa
noyum pachalaiyum thandhthu

ulluvan manyaan uraippathu avarthiramaal
kallam piravo pachappu

uvakkaanyem kaathalar selvaar ivakkaanyen
maeni pachappoor vathu

vilakkatrram paarkkum irulaepol konkan
muyakkatrram paarkkum pachappu

pullik kidandhthaen putaipaeyarndhthaen avvalavil
allikkol vatrrae pachappu

pachandhthaal ivalyenpathu allaal ivalaith
thurandhthaar avaryenpaar il

pachakkaman pattaangken maeni nayappiththaar
nannilaiyar aavar yenin

pachappaenap paerpaeruthal nanrae nayappiththaar
nalkaamai thootrraar yenin