குறள் 1190

பசப்புறுபருவரல்

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்

pachappaenap paerpaeruthal nanrae nayappiththaar
nalkaamai thootrraar yenin


Shuddhananda Bharati

Wailing over pallor

Let people call me all pallid
But my lover let them not deride.


GU Pope

The Pallid Hue

'Tis well, though men deride me for my sickly hue of pain;
If they from calling him unkind, who won my love, refrain.

It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).


Mu. Varadarajan

பிரிவுக்கு உடன்படச்‌ செய்த காதலர்‌ பிரிந்து வருத்துதலைப்‌ பிறர்‌ தூற்றாமலிருப்பாரானால்‌, யான்‌ பசலையுற்றதாகப்‌ பெயரெடுத்தல்‌ நல்லதே.


Parimelalagar

தரைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவறி அவள் இயற்பட மொழிந்தது. நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்: பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று.
விளக்கம்:
('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள். அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று; நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின்,
(என்றவாறு). இது நின்மேனி பசந்ததென்றதோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையே ன்று தலைமகள் கூறியது.