குறள் 1185

பசப்புறுபருவரல்

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது

uvakkaanyem kaathalar selvaar ivakkaanyen
maeni pachappoor vathu


Shuddhananda Bharati

Wailing over pallor

My lover departed me there
And pallor usurped my body here.


GU Pope

The Pallid Hue

My lover there went forth to roam;
This pallor of my frame usurps his place at home.

Just as my lover departed then, did not sallowness spread here on my person ?


Mu. Varadarajan

அதோ பார்‌! எம்முடைய காதலர்‌ பிரிந்து செல்கின்றார்‌; இதோ பார்‌! என்னுடைய மேனியில்‌ பசலைநிறம்‌ வந்து படர்கின்றது.


Parimelalagar

'காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை,' என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது. எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கேசெல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண்- என்மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ?
விளக்கம்:
('உவக்காண், இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள். தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய்,
(என்றவாறு). இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்க, பசலை பரவாநின்றது; அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது.