Sad Memories 121

1201

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

From thought of her unfailing gladness springs,
Sweeter than palm-rice wine the joy love brings.

நினைந்தாலும்‌ தீராத பெரிய மகிழ்ச்சியைச்‌ செய்தலால்‌ (உண்டபோது மட்டும்‌ மகிழ்ச்சி தரும்‌) கள்ளைவிடக்‌ காமம்‌ இன்பமானதாகும்‌.

Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.

பரிமேலழகர் உரை தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் - முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அது பொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து.
விளக்கம்:
(தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு.)
மணக்குடவர் உரை நினைந்தவர் புலம்பலவது சேய்மைக்கண்ணாயினும் அண்மைக்கண்ணா யினும், பிரிந்த தலைமகனை ஒழிவின்றி நினைந்த தலை மகளிர் துன்பமுறுதல். நினைத்தவர் புலம்ப லெபன் பாட மாயின், அதற்கு அவரை நினைத்துப் புலம்ப லென்று பொருளுரைத்துக்கொள்க (இதன் பொருள்) தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும். அது நீங்காத பெருங்களிப்பைத்தரும் ; ஆதலால், கள்ளினும் நாமம் இனிது,
(என்றவாறு).
1202

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்

How great is love! Behold its sweetness past belief!
Think on the lover, and the spirit knows no grief.

தாம்‌ விரும்புகின்ற காதலர்‌ தம்மை நினைத்தலும்‌ பிரிவால்‌ வரக்கூடிய துன்பம்‌ இல்லாமற்‌ போகின்றது! அதனால்‌ காமம்‌ எவ்வளவாயினும்‌ இன்பம்‌ தருவதே ஆகும்‌.

Even to think of one’s beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.

பரிமேலழகர் உரை இதுவும் அது. தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந் நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண்.
விளக்கம்:
(புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப் படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின்,
(என்றவாறு). இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.
1203

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்

A fit of sneezing threatened, but it passed away;
He seemed to think of me, but do his fancies stray?

தும்மல்‌ வருவதுபோலிருந்து வாராமல்‌ அடங்குகின்றதே! என்‌ காதலர்‌ என்னை நினைப்பவர்போலிருந்து நினையாமல்‌ விடுகின்றாரோ?

I feel as if Iam going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.

பரிமேலழகர் உரை தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்‘ர் போன்று நினையாராகல் வேண்டும்.
விளக்கம்:
(சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக் கொண்ட வினை முடிவது போன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ ; தும் மல் தோன்றுவது போன்று கெடாநின்றது,
(என்றவாறு). தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள்.
1204

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்

Have I a place within his heart!
From mine, alas! he never doth depart.

எம்முடைய நெஞ்சில்‌ காதலராகிய அவர்‌ இருக்கின்றாரே! (அது போலவே) யாமும்‌ அவருடைய நெஞ்சத்தில்‌ நீங்காமல்‌ இருக்கின்றோமோ?

He continues to abide in my soul, do I likewise abide in his ?

பரிமேலழகர் உரை இதுவும் அது. எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழுதும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ?
விளக்கம்:
(ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அவர் நெஞ்சத்து யாமும் 2 ளேங்கொல்லோ ; எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராக நின்றார்,
(என்றவாறு). ஒஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என் னும் பொருளதாயிற்று.
1205

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்

Me from his heart he jealously excludes:
Hath he no shame who ceaseless on my heart intrudes?

தம்முடைய நெஞ்சில்‌ எம்மை வரவிடாது காவல்‌ கொண்ட காதலர்‌, எம்முடைய நெஞ்சில்‌ தாம்‌ ஓயாமல்‌ வருவதைப்பற்றி நாணமாட்டாரோ!

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.

பரிமேலழகர் உரை இதுவும் அது. தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணால்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணால்கொல்லோ?
விளக்கம்:
(ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றான்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தாது நெஞ்சின்கண் எர்மை யாம் செல்லாமல் காவல்கொண் டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாபோ, (எ - று ) இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையா ரென்று தெளிந்து கூறியது.
1206

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்

How live I yet? I live to ponder o’er
The days of bliss with him that are no more.

காதலராகிய அவரோடு யான்‌ பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக்கொள்வதால்தான்‌ உயிரோடிருக்கின்றேன்‌; வேறு எதனால்‌ உயிர்வாழ்கின்றேன்‌?

I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?

பரிமேலழகர் உரை அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும்,' என்றாட்குச் சொல்லியது. யான் அவரொடு உற்ற நான் உள்ளே உளேன் - யான் அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன் ?
விளக்கம்:
(நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன் ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன் தூது வருதல், தன் தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை,' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யான் அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன்; அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன். இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ் வாறு நினைந்திரங்கள் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
1207

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்

If I remembered not what were I then? And yet,
The fiery smart of what my spirit knows not to forget!

(காதலரை) மறந்தறியாமல்‌ நினைத்தாலும்‌ உள்ளத்தைப்‌ பிரிவுத்‌ துன்பம்‌ சுடுகின்றதே! நினைக்காமல்‌ மறந்துவிட்டால்‌ என்ன ஆவேனோ?

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should everforget it ?

பரிமேலழகர் உரை இதுவும் அது. மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடா நின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்த படாது உளேனாவது எத்தால்?
விளக்கம்:
(மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது 'மண்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசை நிலை.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ ; மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது,
(என்றவாறு). இது சீரியன் உள்ளிப் பூரியன் மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலை மகள் கூறியது.
1208

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு

My frequent thought no wrath excites. It is not so?
This honour doth my love on me bestow.

காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும்‌ அவர்‌ என்மேல்‌ சினங்‌ கொள்ளார்‌; காதலர்‌ செய்யும்‌ சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?

பரிமேலழகர் உரை இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர்,' என்றாட்குச் சொல்லியது. எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைத்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ - காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ?
விளக்கம்:
(வெகுளாமை: அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின், அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும், 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்வது கூறியவாறு.
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ் வளவன்றோ அவர் செய்யும் அருள்,
(என்றவாறு). அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.
1209

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து

Dear life departs, when his ungracious deeds I ponder o’er,
Who said erewhile, “We’re one for evermore’.

‘நாம்‌ இருவரும்‌ வேறு அல்லேம்‌’ என்று அடிக்கடி சொல்லும்‌ அவர்‌ இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைந்து என்‌ இனிய உயிர்‌ அழிகின்றது.

My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.

பரிமேலழகர் உரை தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் 'நாம் இருவரும் வேறல்லம்,' என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து; என் இன்னுயிர் விளியும் - எனது இனிய உயிர் கழியாநின்றது.
விளக்கம்:
(அளியின்மை, பின் வருவராதலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு,' என எதிர்அழிந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நம்முள் நாம் வேறல்ல தொன்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது இனிய உயிர் அழியாநின்றது, (எ - று ) இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.
1210

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி

Set not; so may’st thou prosper, moon! that eyes may see
My love who went away, but ever bides with me.

திங்களே! பிரியாமலிருந்து இறுதியில்‌ பிரிந்து சென்ற காதலரை என்‌ கண்ணால்‌ தேடிக்‌ காணும்படியாக நீ மறைந்து விடாமல்‌ இருப்பாயாக!

May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.

பரிமேலழகர் உரை வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது. மதி - மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக.
விளக்கம்:
(கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன்கண்ணே சேர்தல். முதலொடு சினைக்கு ஒற்றுமை உண்மையின், 'சென்றாரைக் காண' என்றும், குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின்; கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிப்படுகின்றதில்லை என அதனால் துயில பெறாது வருந்துகின்றாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி' என்பது அசைநிலை.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணு மாறு படுகின்றதில்லை இம்பதி,
(என்றவாறு). பட்டதாயின், என் கண் உறங்கும்; உறங்கினால், அவரைக் காணலாமென் பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்த முற்றதும் கூறினாளாம்.


transliteration

ullinum theeraap paerumakil seithalaal
kallinum kaamam inithu

yenaiththonru inithaekaan kaamamthaam veelvaar
ninaippa varuvathonru il

ninaippavar ponru ninaiyaarkol thummachiinaippathu
thummachiinaippathu ponru kedum

yaamum ulaengkol avarnaenjchaththu yendhnaenjchaththu
oao ularae avar

thamnaenjchaththu yemmaik katikontaar naanaarkol
yemnaenjchaththu oavaa varal

matrriyaan yennulaen manno avaroduyaan
utrranaal ulla ulaen

marappin yevanaavan matrkol marappariyaen
ullinum ullam sudum

yenaiththu ninaippinum kaayaar anaiththanno
anaiththanno kaathalar seiyuchiirappu

viliyumaen innuyir vaerallam yenpaar
aliyinmai aatrra ninaindhthu

vitaaathu senraaraik kanninaal kaanap
pataaathi vaali mathi