குறள் 1203

நினைந்தவர்புலம்பல்

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்

ninaippavar ponru ninaiyaarkol thummachiinaippathu
thummachiinaippathu ponru kedum


Shuddhananda Bharati

Sad memories

To sneeze I tried hence but could not
Me he tried to think but did not.


GU Pope

Sad Memories

A fit of sneezing threatened, but it passed away;
He seemed to think of me, but do his fancies stray?

I feel as if Iam going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.


Mu. Varadarajan

தும்மல்‌ வருவதுபோலிருந்து வாராமல்‌ அடங்குகின்றதே! என்‌ காதலர்‌ என்னை நினைப்பவர்போலிருந்து நினையாமல்‌ விடுகின்றாரோ?


Parimelalagar

தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்‘ர் போன்று நினையாராகல் வேண்டும்.
விளக்கம்:
(சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக் கொண்ட வினை முடிவது போன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ ; தும் மல் தோன்றுவது போன்று கெடாநின்றது,
(என்றவாறு). தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள்.