குறள் 1202

நினைந்தவர்புலம்பல்

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்

yenaiththonru inithaekaan kaamamthaam veelvaar
ninaippa varuvathonru il


Shuddhananda Bharati

Sad memories

Pains are off at the lover's thought
In all aspects this love is sweet.


GU Pope

Sad Memories

How great is love! Behold its sweetness past belief!
Think on the lover, and the spirit knows no grief.

Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.


Mu. Varadarajan

தாம்‌ விரும்புகின்ற காதலர்‌ தம்மை நினைத்தலும்‌ பிரிவால்‌ வரக்கூடிய துன்பம்‌ இல்லாமற்‌ போகின்றது! அதனால்‌ காமம்‌ எவ்வளவாயினும்‌ இன்பம்‌ தருவதே ஆகும்‌.


Parimelalagar

இதுவும் அது. தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந் நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண்.
விளக்கம்:
(புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப் படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின்,
(என்றவாறு). இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.