குறள் 1210

நினைந்தவர்புலம்பல்

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி

vitaaathu senraaraik kanninaal kaanap
pataaathi vaali mathi


Shuddhananda Bharati

Sad memories

Hail moon! Set not so that I find
Him who left me but not my mind.


GU Pope

Sad Memories

Set not; so may'st thou prosper, moon! that eyes may see
My love who went away, but ever bides with me.

May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.


Mu. Varadarajan

திங்களே! பிரியாமலிருந்து இறுதியில்‌ பிரிந்து சென்ற காதலரை என்‌ கண்ணால்‌ தேடிக்‌ காணும்படியாக நீ மறைந்து விடாமல்‌ இருப்பாயாக!


Parimelalagar

வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது. மதி - மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக.
விளக்கம்:
(கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன்கண்ணே சேர்தல். முதலொடு சினைக்கு ஒற்றுமை உண்மையின், 'சென்றாரைக் காண' என்றும், குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின்; கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிப்படுகின்றதில்லை என அதனால் துயில பெறாது வருந்துகின்றாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி' என்பது அசைநிலை.)


Manakkudavar

(இதன் பொருள்) என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணு மாறு படுகின்றதில்லை இம்பதி,
(என்றவாறு). பட்டதாயின், என் கண் உறங்கும்; உறங்கினால், அவரைக் காணலாமென் பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்த முற்றதும் கூறினாளாம்.