குறள் 1208

நினைந்தவர்புலம்பல்

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு

yenaiththu ninaippinum kaayaar anaiththanno
anaiththanno kaathalar seiyuchiirappu


Shuddhananda Bharati

Sad memories

I bring him to ceaseless memory
He chides not; and thus honours me.


GU Pope

Sad Memories

My frequent thought no wrath excites. It is not so?
This honour doth my love on me bestow.

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?


Mu. Varadarajan

காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும்‌ அவர்‌ என்மேல்‌ சினங்‌ கொள்ளார்‌; காதலர்‌ செய்யும்‌ சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!


Parimelalagar

இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர்,' என்றாட்குச் சொல்லியது. எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைத்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ - காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ?
விளக்கம்:
(வெகுளாமை: அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின், அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும், 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்வது கூறியவாறு.


Manakkudavar

(இதன் பொருள்) யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ் வளவன்றோ அவர் செய்யும் அருள்,
(என்றவாறு). அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.