The Abandonment of Reserve 114

1131

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி

To those who ‘ve proved love’s joy, and now afflicted mourn,
Except the helpful ‘horse of palm’, no other strength remains.

காமத்தால்‌ துன்புற்று (காதலியின்‌ அன்பு பெறாமல்‌) வருந்தினவர்க்குக்‌ காவல்‌ மடலூர்தல்‌ அல்லாமல்‌ வலிமையான துணை வேறொன்றும்‌ இல்லை.

To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.

பரிமேலழகர் உரை சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது. காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை.
விளக்கம்:
(ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார்' இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்,' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை நாணுத்துறவுரைத்தலாவது தலைமகன் தனது நாணின்மையைத் தோழிக்குக் கூற தலும் தலைமகளது நாணம். நீங்கினமையைத் தோழி தலைமகற்குக் கூறுதலுமாம். காதல் மிக்கார்க்கு நாணமில்லை யென்பதனால், அதன்பின் இது கூறப் பட்டது. (இதன் பொருள்) காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை,
(என்றவாறு) இது தலைமகனைத் தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.
1132

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து

My body and my soul, that can no more endure,
Will lay reserve aside, and mount the ‘horse of palm’.

(காதலியன்‌ பிரிவால்‌ ஆகிய துன்பத்தைப்‌) பொறுக்காத என்‌ உடம்பும்‌ உயிரும்‌, நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு மடலூரத்‌ துணிந்தன.

Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.

பரிமேலழகர் உரை 'நாணுடைய நுமக்கு அது முடியாது,' என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது. நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாதா உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன, நாணினை நீக்கி நிறுத்து.
விளக்கம்:
('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், அதனை விலக்குவதாய நாணினை அகற்றி, செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகு பெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. 'அதுவும் இது பொழுது நீங்கிற்று' என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதான் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற் குறை நேர்தல் நோக்கி.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும் ; நாணினை நீக்கி நின்று ,
(என்றவாறு). இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.
1133

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்

I once retained reserve and seemly manliness;
To-day I nought possess but lovers’ ‘horse of palm’.

நாணமும்‌ நல்ல ஆண்மையும்‌ முன்பு பெற்றிருந்தேன்‌; (காதலியைப்‌ பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம்‌ மிக்கவர்‌ ஏறும்‌ மடலையே உடையேன்‌.

Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the

பரிமேலழகர் உரை 'நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது. நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்;
விளக்கம்:
(காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். நாண்: இழிவாயின செய்தற் கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன; இன்று உள்ளது இதுவேயாகலின், கடிதின் முடியும்,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடை யேன் ; காமமிக்கார் ஏறும் (மடலினை இன்றுடையேனானேன்,
(என்றவாறு).
1134

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

Love’s rushing tide will sweep away the raft
Of seemly manliness and shame combined.

நாணமும்‌ நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக்‌ காமம்‌ என்னும்‌ கடுமையான வெள்ளம்‌ அடித்துக்‌ கொண்டு போய்‌ விடுகின்றது.

The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.

பரிமேலழகர் உரை நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின், அதனால் 'அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற் பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது.
விளக்கம்:
(அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் மாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்ற து,
(என்றவாறு).
1135

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்

The maid that slender armlets wears, like flowers entwined,
Has brought me ‘horse of palm,’ and pangs of eventide!

மடலேறுதலோடு மாலைக்காலத்தில்‌ வருந்தும்‌ துயரத்தை மாலைபோல்‌ தொடர்ந்த சிறு வளையல்‌ அணிந்த காதலி எனக்குத்‌ தந்தாள்‌.

She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.

பரிமேலழகர் உரை
விளக்கம்:
(காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அதுபற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள்தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்,' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மாலை போலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் மடலோடே கூட மாலைக்காலத்து உறுந்துயரினைத் தந்தாள்,
(என்றவாறு). தொடலை யென்பதற்குச் சோர்ந்தவளை யெனினும் அமையும். குறுந் தொடி - பிள்ளைப்பணி. இவை ஏழும் தலைமகன் கூற்று.
1136

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்

Of climbing ‘horse of palm’ in midnight hour, I think;
My eyes know no repose for that same simple maid.

மடலூர்தலைப்‌ பற்றி நள்ளிரவிலும்‌ உறுதியாக நினைக்கின்றேன்‌; காதலியின்‌ பிரிவின்‌ காரணமாக என்‌ கண்கள்‌ உறங்காமல்‌ இருக்கின்றன.

Mine eyes will not close in sleep on your mistress’s account; even at midnight will I think of mounting the palmyra horse.

பரிமேலழகர் உரை 'மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது.) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலை பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன்.
விளக்கம்:
('பேதை' என்றது பருவம் பற்றி அன்று; மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) போதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது ; ஆத லானே , மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்,
(என்றவாறு). இது மடலேறுவது நாளையன்றே ; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு, என் கண் உறங்காது; ஆதலான், மறவேனென்று தலைமகன் கூறியது.
1137

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்

There’s nought of greater worth than woman’s long-enduring soul,
Who, vexed by love like ocean waves, climbs not the ‘horse of palm’.

கடல்போன்ற காமநோயால்‌ வருந்தியும்‌, மடலேறாமல்‌ துன்பத்தைப்‌ பொறுத்துக்கொண்டிருக்கும்‌ பெண்‌ பிறப்பைப்‌ போல்‌ பெருமையுடைய பிறவி இல்லை.

There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.

பரிமேலழகர் உரை 'பேதைக்கு என் கண் படல் ஒல்லா,' என்பது பற்றி, 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்' என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை.
விளக்கம்:
('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது; நீ அஃது அறிகின்றிலை,' என்பதாம். இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப்போல் மேம்பட்டது இல்லை,
(என்றவாறு). இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்தமொக்கும்; பெண் டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற் றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.
1138

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்

In virtue hard to move, yet very tender, too, are we;
Love deems not so, would rend the veil, and court publicity!

இவர்‌ நெஞ்சை நிறுத்தும்‌ நிறை இல்லாதவர்‌, மிகவும்‌ இரங்கத்தக்கவர்‌ என்று கருதாமல்‌ காமம்‌ மறைந்திருத்தலைக்‌ கடந்து மன்றத்திலும்‌ வெளிப்படுகின்றதே!

Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).

பரிமேலழகர் உரை காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது. நிறை அரியர்
விளக்கம்:
(என்னாது) - 'இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர்' என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - 'மிகவும் அளிக்கத்தக்கார்' என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது. ('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று' என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனி, அறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நிறையிலர்; மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படராநின்றது,
(என்றவாறு). இஃது அம்பலம் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.
1139

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு

‘There’s no one knows my heart,’ so says my love,
And thus, in public ways, perturbed will rove.

அமைதியாய்‌ இருந்ததால்‌ எல்லாரும்‌ அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம்‌ தெருவில்‌ பரவி மயங்கிச்‌ சுழல்கின்றது.

My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

பரிமேலழகர் உரை இதுவும் அது. எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர்; இனி அவ்வாறு நில்லாது யானை வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர்மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது.
விளக்கம்:
(மயங்குதல் அம்பலாதல்; மறுகுதல்; அலராதல். 'அம்பலும் அலருமாயிற்று. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம். 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என்னை யொழிந்த எல்லாரும் அறிவில் ரென்றே சொல்லி, என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது, (-). சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.
1140

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு

Before my eyes the foolish make a mock of me,
Because they ne’er endured the pangs I now must drie.

யாம்‌ பட்ட துன்பங்களைத்‌ தாம்‌ படாமையால்‌, அறிவில்லாதவர்‌ யாம்‌ கண்ணால்‌ காணுமாறு எம்‌ எதிரில்‌ எம்மைக்‌ கண்டு நகைக்கின்றனர்‌.

Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.

பரிமேலழகர் உரை செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை!' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது. யாம் கண்ணிற்கான அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு அவர் அங்ஙனஞ் செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான்.
விளக்கம்:
('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகா நின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாங் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை யறி விலார் நகா நின்றார் ; அவரங்ஙனஞ் செய்கின்றது யாமுற்ற நோய்கள் தாமுறா மையான்,
(என்றவாறு)


transliteration

kaamam ulandhthu varundhthinaarkku yaemam
madalallathu illai vali

nonaa udampum uyirum madalaerum
naaninai neekki niruththu

naanodu nallaanmai pandutaiyaen inrutaiyaen
kaamutrraar yaerum madal

kaamak kadumpunal uikkum naanodu
nallaanmai yennum punai

thodalaik kurundhthoti thandhthaal madalodu
maalai ulakkum thuyar

madaloorthal yaamaththum ulluvaen manra
padalollaa paethaikken kan

kadalanna kaamam ulandhthum madalaeraap
paennin paerundhthakka thil

niraiyariyar manaliyar yennaathu kaamam
maraiyirandhthu manru padum

arikilaar yellaarum yenraeyen kaamam
marukin marukum marundu

yaamkannin kaana nakupa arivillaar
yaampatda thaampataa aaru