குறள் 1138

நாணுத்துறவுரைத்தல்

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்

niraiyariyar manaliyar yennaathu kaamam
maraiyirandhthu manru padum


Shuddhananda Bharati

Decorum defied

Lust betrays itself in haste
Though women are highly soft and chaste.


GU Pope

The Abandonment of Reserve

In virtue hard to move, yet very tender, too, are we;
Love deems not so, would rend the veil, and court publicity!

Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).


Mu. Varadarajan

இவர்‌ நெஞ்சை நிறுத்தும்‌ நிறை இல்லாதவர்‌, மிகவும்‌ இரங்கத்தக்கவர்‌ என்று கருதாமல்‌ காமம்‌ மறைந்திருத்தலைக்‌ கடந்து மன்றத்திலும்‌ வெளிப்படுகின்றதே!


Parimelalagar

காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது. நிறை அரியர்
விளக்கம்:
(என்னாது) - 'இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர்' என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - 'மிகவும் அளிக்கத்தக்கார்' என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது. ('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று' என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனி, அறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) நிறையிலர்; மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படராநின்றது,
(என்றவாறு). இஃது அம்பலம் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.