Declaration of Love’s special Excellence 113

1121

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்

The dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow.

மென்மையான மொழிகளைப்‌ பேசுகின்ற இவளுடைய தூய பற்களில்‌ ஊறிய நீர்‌, பாலுடன்‌ தேனைக்‌ கலந்தாற்‌ போன்றதாகும்‌.

The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.

பரிமேலழகர் உரை இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது. பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம் மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும்.
விளக்கம்:
('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன்சுவைபோலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறுவேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.)
மணக்குடவர் உரை காதற்சிறப்புரைத்தலாவது தலைமகன் காதல் மிகுதி கூறுதலும் தலைமகள் காதல் மிகுதி கூறுதலுமாம். இது நலம்புனைந்துரைத்தலின் பின் நிகழ்வதொன் றாகலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) பாலொடுகூடத் தேனைக் கலந்தாற்போலும் ; மிகவும் இனிமை தரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர்,
(என்றவாறு). இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறி யது.
1122

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

Between this maid and me the friendship kind
Is as the bonds that soul and body bind.

இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள்‌, உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள்‌ எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

The love between me and this damsel is like the union of body and soul.

பரிமேலழகர் உரை பிரிவு அச்சம் கூறியது. உடம்பொடு உயிரிடை என்ன அன்ன-உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய? அத்தன்மைய; மடந்தையொடு எம்மிடை நட்பு - இம்மடந்தையோடு எம்மிடை உளவாய நட்புக்கள். 'என்ன' எனப்பன்மையாற் கூறியது, இரண்டும தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்ப துன்பங்கள்
விளக்கம்:
(ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி. தெய்வப் புணர்ச்சியாகலான், அது பொழுது உணர்ச்சியிலள் ஆகியாள் பின் உடையளாமன்றே? ஆயவழி 'இவன் யாவன் கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல்?' எனவும், 'இன்னும் இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்?' எனவும் அவள் மனத்தின்கண் நிகழும்; அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து, அவை தீரக் கூறியவாறு. 'என்னை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்)உடம்போடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன் மைத்து ; மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு,
(என்றவாறு). நின்னிற் பிரியமாட்டே னென்றவாறு. இது தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது.
1123

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

For her with beauteous brow, the maid I love, there place is none;
To give her image room, O pupil of mine eye, begone!

என்‌ கண்ணின்‌ கருமணியில்‌ உள்ள பாவையே! நீ போய்விடும்‌! யாம்‌ விரும்புகின்ற இவளுக்கு என்‌ கண்ணில்‌ இருக்க இடம்‌ இல்லையே!

O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.

பரிமேலழகர் உரை இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது. கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின் கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம்.
விளக்கம்:
('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின். நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என் கண்ணும் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போது வாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது, (எ - று.
1124

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து

Life is she to my very soul when she draws nigh;
Dissevered from the maid with jewels rare, I die!

ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள்‌ கூடும்‌ போது உயிர்க்கு வாழ்வு போன்றவள்‌; பிரியும்‌ போது உயிர்க்குச்‌ சாவு போன்றவள்‌.

My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.

பரிமேலழகர் உரை பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது. ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும்; நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்.
விளக்கம்:
('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும், அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள் : நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள், (
(என்றவாறு). இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலை மகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
1125

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

I might recall, if I could once forget; but from my heart
Her charms fade not, whose eyes gleam like the warrior’s dart.

போர்‌ செய்யும்‌ கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான்‌ மறந்தால்‌ பிறகு நினைக்க முடியும்‌; ஆனால்‌, ஒருபோதும்‌ மறந்ததில்லையே!

If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).

பரிமேலழகர் உரை ஒருவழித் தணந்துவந்த தலைமகன், 'நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ?' என்ற தோழிக்குச் சொல்லியது. ஒள் அமர்க்கண்ணாள் குணம்; யான் மறப்பினை உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.
விளக்கம்:
(மன்: ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று; மேல் தலைமகள் கூற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மறந்தேனாயின், நினைப்பேன் யான்; மறத்தலறியேன் ; ஒள்ள மர்க் கண்ணாள் குணத்தினை,
(என்றவாறு). தோழியிற் கூடி நீங்குந் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.
1126

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்

My loved one’s subtle form departs not from my eyes;
I wink them not, lest I should pain him where he lies.

எம்‌ காதலர்‌ எம்‌ கண்ணுள்ளிருந்து போகமாட்டார்‌; கண்ணை மூடி இமைத்தாலும்‌ அதனால்‌ வருந்தமாட்டார்‌; அவர்‌ அவ்வளவு நுட்பமானவர்‌.

My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is soethereal.

பரிமேலழகர் உரை ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக; எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா நுண்ணியர்.
விளக்கம்:
(இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என் கண்ணுள் நின்று நீங்கார் ; இமைப்பேனாயின், இவட்கு உறுத்து மென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார்; ஆதலான், எம் மாற் காதலிக் கப்பட்டார், நுண்ணிய வறிவை யுடையார்,
(என்றவாறு).
1127

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து

My love doth ever in my eyes reside;
I stain them not, fearing his form to hide.

எம்‌ காதலர்‌ கண்ணினுள்‌ இருக்கின்றார்‌, ஆகையால்‌, மை எழுதினால்‌ அவர்‌ மறைவதை எண்ணிக்‌ கண்ணுக்கு மையும்‌ எழுதமாட்டோம்‌!

As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.

பரிமேலழகர் உரை இதுவும் அது. காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து.
விளக்கம்:
(இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை?' என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எங்காதலவர் கண்ணுள்ளார்; ஆதலானே, கண்ணும் மையெழு தேம் ; அவர் ஒளித்தலை யறிந்து,
(என்றவாறு). எப்பொழுதும் நோக்கியிருத்தலால், கோலஞ் செய்தற்குக் காலம் பெற்றிலே னென் றவா றாயிற்று.
1128

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து

Within my heart my lover dwells; from food I turn
That smacks of heat, lest he should feel it burn.

எம்‌ காதலர்‌ நெஞ்சினுள்‌ இருக்கின்றார்‌; ஆகையால்‌ சூடான பொருளை உண்டால்‌ அவர்‌ வெப்பமுறுதலை எண்ணிச்‌ சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்‌

As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.

பரிமேலழகர் உரை இதுவும் அது காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து.
விளக்கம்:
('எப்பொழுதும் எம் நெஞ்சின் கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை?' என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம் நெஞ்சத்தி லிருக்கின்றார்; ஆத லானே, வெய்தாக வுண்டலை அஞ்சா நின்றோம்; அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து. இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது காரணத்து உறவு உரைத்தல்.
1129

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்

I fear his form to hide, nor close my eyes:
‘Her love estranged is gone’’ the village cries.

கண்‌ இமைத்தால்‌ காதலர்‌ மறைந்துபோதலை அறிகின்றேன்‌. அவ்வளவிற்கே இந்த ஊரார்‌ அவரை அன்பில்லாதவர்‌ என்று சொல்லுவர்‌.

Twill not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this townsays, he is unloving.

பரிமேலழகர் உரை வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது. இமைப்பிற் கரப்பாக்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்தற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
விளக்கம்:
(தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும் பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கண்ணிமைக்குமாயின், அவரொளிக்கு மது யானறிவேன், அவ் வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்; அதற்காக இமைக்கிலன்,
(என்றவாறு). இது கண் துயிலமரத்தலென்னும் மெய்ப்பாடு.
1130

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்

Rejoicing in my very soul he ever lies;
‘Her love estranged is gone far off!’ the village cries.

காதலர்‌ எப்போதும்‌ என்‌ உள்ளத்தில்‌ மகிழ்ந்து வாழ்கின்றார்‌; ஆனால்‌ அதை அறியாமல்‌ பிரிந்து வாழ்கின்றார்‌; அன்பில்லாதவர்‌’ என்று இந்த ஊரார்‌ அவரைப்‌ பழிப்பர்‌.

My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore)dwells afar.

பரிமேலழகர் உரை இதுவும் அது. என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர், என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
விளக்கம்:
('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்; அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லாநின்றது. இவ்வூர், (எ-று). தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று நெஞ்சின் மேல் வைத்துக் கூறியது.


transliteration

paalodu thaenkalandh thatrrae panimoli
vaalaeyiru ooriya neer

udampodu uyiritai yennamatr ranna
madandhthaiyodu yemmitai natpu

karumaniyitr paavaainee pothaayaam veelum
thirunuthatrku illai idam

vaalthal uyirkkannal aayilai saathal
athatrkannal neengkum idaththu

ulluvan manyaan marappin marappariyaen
ollamark kannaal kunam

kannullin pokaar imaippin parukuvaraa
nunniyaryem kaatha lavar

kannullaar kaatha lavaraakak kannum
yeluthaem karappaakku arindhthu

naenjchaththaar kaatha lavaraaka vaeithundal
anjsuthum vaepaak karindhthu

imaippin karappaakku arival anaiththitrkae
yaethilar yennumiv voor

uvandhthuraivar ullaththul yenrum ikandhthuraivar
yaethilar yennumiv voor