The Praise of her Beauty 112

1111

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

O flower of the sensitive plant! than thee
More tender’s the maiden beloved by me.

அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்‌! நீ வாழ்க! யாம்‌ விரும்பும்‌ காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள்‌.

May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.

பரிமேலழகர் உரை இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது. அனிச்சமே வாழிநன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக; மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை உடையவள்.
விளக்கம்:
(அனிச்சம்: ஆகுபெயர். 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனிமையையே பாராட்டினான். 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
மணக்குடவர் உரை நலம்புனைந்துரைத்தலாவது தலைமகளது நலத்தினை அலங்கார வகையாய்க் கூறுதல். புனைந்துரை எனினும், பாராட்டெனினும், கொண்டாட் டெனினும், மகிழ்ச்சியெனினும் ஒக்கும். (இதன் பொருள்) அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையள் ; காண்,
(என்றவாறு). இஃது உடம்பினது மென்மை கூறிற்று.
1112

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,
That many may see; it was surely some folly that over you stole!

நெஞ்சமே! இவளுடைய கண்கள்‌ பலரும்‌ காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக்‌ கண்டால்‌ நீ மயங்குகின்றாய்‌!

O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.

பரிமேலழகர் உரை இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது. நெஞ்சே - நெஞ்சே இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று - யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; மலர் காணின் மையாத்தி - தாமரை குவளைநீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய்; நின்அறிவு இருந்தவாறென்? மையாத்தல்; ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நெஞ்சே! நீ இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று மலரைக் கண்ட பொழுதே மயங்கா நின்றாய்,
(என்றவாறு). இது கண் பூவினது நிறமொக்குமாயினும், குண்மொவ்வாதென்று கூறிற்று.
1113

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

As tender shoot her frame; teeth, pearls; around her odours blend;
Darts are the eyes of her whose shoulders like the bambu bend.

மூங்கில்‌ போன்ற தோளை உடைய இவளுக்குத்‌ தளிரே மேனி; முத்தே பல்‌; இயற்கை மணமே மணம்‌; வேலே மை உண்ட கண்‌.

The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath,fragrance; and her dyed eyes, lances.

பரிமேலழகர் உரை கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது. வேய்த்தோளவட்கு - வேய் போலும் தோளினையுடையவட்கு; மேனி முறி - நிறம் தளிர் நிறமாயிருக்கும்; முறுவல் முத்தம் - பல் முத்தமாயிருக்கும்; நாற்றம் வெறி - இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்; உண்கண் வேல் - உண்கண்கள் வேலாயிருக்கும்.
விளக்கம்:
(பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி, முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையால் கூறினமையின், புனைந்துரையாயிற்று; 'நின்னாற் கருதப்பட்டாளை அறியேன்' என்று சேண்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தளிர்போலும் மேனி; முத்துப்போலும் முறுவல் ; நறுநாற்றம் போலும் நாற்றம் ; வேல் போலும் உண்கண் ; வேயொத்த தோளினை யுடை யாளுக்கு,
(என்றவாறு) இது நிறமும், எயிறும், நாற்றமும், கண்ணின் வடிவும், தோளும் புகழ்ந்து கூறிற்று.
1114

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

The lotus, seeing her, with head demiss, the ground would eye,
And say, ‘With eyes of her, rich gems who wears, we cannot vie.’

குவளை மலர்கள்‌ காணும்‌ தன்மைபெற்றுக்‌ கண்டால்‌, “இவளுடைய கண்களுக்கு யாம்‌ ஒப்பாகவில்லையே” என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்‌.

If the blue lotus could see, it would stoop and look at the ground saying, “I can never resemble theeyes of this excellent jewelled one.”

பரிமேலழகர் உரை பாங்கற்கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது. குவளை - குவளைப் பூக்கள் தாமும்; காணின் - காண்டல் தொழிலையுடையவாயின்; மாண் இழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும் - 'மாண்ட இழையினை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம்!' என்று கருதி, அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும். பண்பானேயன்றித் தொழிலானும் ஒவ்வாது என்பான், 'காணின்' என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குவளை மலர் காண வற்றாயின், மாட்சிமைப்பட்ட இழை யினையுடையாளது கண்ணை ஒவ்வோமென்று நாணி, கவிழ்ந்து நிலத்தை நோக்கும். இது காணுந்தோறும் ஒவ்வாதென்றது.
1115

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை

The flowers of the sensitive plant as a girdle around her she placed;
The stems she forgot to nip off; they ‘Il weigh down the delicate waist.

அவள்‌ தன்‌ மென்மை அறியாமல்‌ அனிச்ச மலர்களைக்‌ காம்பு களையாமல்‌ சூடினாள்‌; அவற்றால்‌ நொந்து வருந்தும்‌ அவளுடைய இடைக்குப்‌ பறைகள்‌ நல்லனவாய்‌ ஒலியா.

No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.

பரிமேலழகர் உரை பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது. அனிச்சப்பூக்கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா.
விளக்கம்:
('அம் முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறைபடுதலும் இலக்கணைக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்; இனி இவ ளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை,
(என்றவாறு). இஃது இடையினது நுண்மை கூறிற்று.
1116

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

The stars perplexed are rushing wildly from their spheres;
For like another moon this maiden’s face appears.

விண்மீன்கள்‌ திங்களையும்‌ இவளுடைய முகத்தையும்‌ வேறுபாடு கண்டு அறியமுடியாமல்‌ தம்‌ நிலையில்‌ நிற்காமல்‌ கலங்கித்‌ திரிகின்றன.

The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid’s countenance.

பரிமேலழகர் உரை இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது. மீன் - வானத்து மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும், 'இதுமதி' 'இதுமுகம்' என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன.
விளக்கம்:
(ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு, இவ்விரண்டினையும் அறியாது, தன்னிலையினின்றுங் கலங்கித்திரியா நின்றன் மீன்கள்,
(என்றவாறு). மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இது மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கு மென்று கூறியது.
1117

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து

In moon, that waxing waning shines, as sports appear,
Are any spots discerned in face of maiden here?

குறைந்த இடமெல்லாம்‌ படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம்‌ உள்ளதுபோல்‌ இந்த மாதர்‌ முகத்தில்‌ களங்கம்‌ உண்டோ? இல்லையே!

Could there be spots in the face of this maid like those in the bright full moon ?

பரிமேலழகர் உரை இதுவும் அது. அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது? அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ?
விளக்கம்:
(இடம் - கலை. மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல், இம்மாதர் முகத் துக்கு மறுவுண்டோ ?
(என்றவாறு). இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறி வின்மையாம் ; இவள் முகத்து மறுவில்லையாதலான், அது மதியோடு ஒவ்வா தென்று கூறியது.
1118

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

Farewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine.

திங்களே! இம்‌ மாதரின்‌ முகத்தைப்போல்‌ ஒளி வீச உன்னால்‌ முடியுமானால்‌, நீயும்‌ இவள்போல்‌ என்‌ காதலுக்கு உரிமை பெறுவாய்‌.

If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving?

பரிமேலழகர் உரை இதுவும் அது. மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல் ஒளி விடவில்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும்வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி.
விளக்கம்:
('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்,' என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மதியே! நீ இம்மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையாயின், நீயும் எம்மாற் காதலிக்கப்படுத்தி,
(என்றவாறு). வாழி - அசை. இது மறுப்போயின தாய முகமென்று கூறப்பட்டது.
1119

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,
Shine for my eyes alone, O moon, shine not for all to see!

திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால்‌, நீ பலரும்‌ காணும்படியாகத்‌ தோன்றாதே.

O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.

பரிமேலழகர் உரை இதுவும் அது. மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் - இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத்தோன்று; பலர் காணத் தோன்றாதொழி.
விளக்கம்:
(தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது,' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக,
(என்றவாறு). இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும், குணத்தினாலே ஒவ்வாதென்றது.
1120

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

The flower of the sensitive plant, and the down on the swan’s white breast,
As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed.

அனிச்ச மலரும்‌ அன்னப்பறவையின்‌ இறகும்‌ ஆகிய இவைகள்‌ மாதரின்‌ மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள்‌ போன்றவை.

The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny)Nerunji.

பரிமேலழகர் உரை உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்.
விளக்கம்:
(முன் வலிதாதலுடைமையின் 'பழம்' என்றான். 'இத்தன்மைத்தாய அடி ''பாத்தி அன்ன குடுமிக் கூர்ங்கற்'' களையுடைய (அகநா. களிற். 5) வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்?' என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமை யாகலின், இதுவும் இவ்வதிகாரத்தாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும், மாதபடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும்,
(என்றவாறு). இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று.


transliteration

nanneerai vaali anichchamae ninninum
maenneeral yaamveel paval

malarkaanin maiyaaththi naenjsae ivalkan
palarkaanum poovokkum yenru

murimaeni muththam muruval vaerinaatrram
vaelunkan vaeiththo lavatku

kaanin kuvalai kavilndhthu nilannokkum
maanilai kannovvaem yenru

anichchappook kaalkalaiyaal paeithaal nukappitrku
nalla pataaa parai

mathiyum madandhthai mukanum ariyaa
pathiyin kalangkiya meen

aruvaai niraindhtha avirmathikkup pola
maruvuntoh maathar mukaththu

maathar mukampol olivida vallaiyael
kaathalai vaali mathi

malaranna kannaal mukamoththi yaayin
palarkaanath thonral mathi

anichchamum annaththin thooviyum maathar
atikku naeruchip palam